Sunday, January 15, 2012

பிரெஞ்சு வேதியல் விஞ்ஞானி அன்செல்ம் பேயன்

பிரெஞ்சு வேதியல் விஞ்ஞானி அன்செல்ம் பேயனின் பிறந்த தினம்,இன்று, ஜனவரி 6.

by Mohana Somasundram on Friday, January 6, 2012 at 10:24pm

நண்பர்களே இன்று, ஜனவரி 6 ம் நாள் பிரெஞ்சு வேதியல் விஞ்ஞானி அன்செல்ம் பேயனின் ( Anselme Payen (January 6, 1795 - May 12, 1871) பிறந்த தினம். அவர் தொழில்துறை வேதியலுக்கு ஏராளமான பங்களிப்பைச் செய்துள்ளார். தாவரத்தின் அடிப்படைப் பொருள் மாவுப்பொருள் கலந்த செல்லுலோஸ் என்பதே. இப்படி ஒரு பொருள் தாவரத்தில் உள்ளதை முதன் முதல் கண்டுபிடித்தவர் பிரெஞ்சு விஞ்ஞானி அன்செல்ம் பேயன்தான். அதற்கு செல்லுலோஸ் என்ற பெயரைத் தந்தவரும் அவரே.

அன்செல்ம் பாரிசில் 1795 ம ஆண்டு, ஜனவரி 6 ம நாள் பிறந்தார். அவர் ஒரு வியாபாரியின் மகன். அவரது 13 வது வயதில் தன் தந்தையுடன் இணைந்து அறிவியல் படித்தார். பின்னர் வேதியல் படித்தார். அன்செல்மின் 23 வது வயதில் அவர் போரக்ஸ் சுத்தம் செய்யும் தொழிற்சாலையில் மேலாளராகச் சேர்ந்தார். அங்கே சோடா மற்றும் போரிக் அமிலத்திலிருந்து போரக்ஸ் தயாரிக்கும் முறையை இவரே உருவாக்கினார். அதற்கு முன்பாக போரக்ஸ் கிழக்கிந்திய தீவுகளிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் அன்செல்ம் உருவாக்கிய இந்த போரக்ஸ் உற்பத்தி முறை, அதன் விலையை மூன்றில் ஒரு பங்காக குறைத்தது. அது மட்டுமா? போரசில் மேலாதிக்கம் செய்து வந்த ஒரே முதலாளியான டச்சின் ஆதிக்கத்துக்கு அடி விழுந்தது.

அன்செல்ம் சர்க்கரையை சுத்தம் செய்யும் முறை மூலம், உருளைக்கிழங்கிலிருந்து ஸ்டார்ச் மற்றும் ஆல்கஹாலை சுத்தம் செய்து தயாரிக்கும் முறையும் உருவாக்கினார். நைட் த்ரோ சனை நிர்ணயிக்கும் முறையையும் கண்டறிந்தார். பல கண்டுபிடிப்புகள் மூலம் சர்க்கரையை படிகமாக்குதல், நிறம் நீக்குதல், ஆராய்தல் போன்றவற்றை அறிய நிறமற்ற அளவுமானியைக் (decolorimeter) கண்டுபிடித்தார் .

அன்செல்ம் 1833 ல், டையாச்ட்ஸ் என்ற நொதியைக் கண்டுபிடித்தார். அதன் மூலம் செல்லுலோஸ் என்ற தாவரத்தின் அடிப்படைப் பொருளை 1835 ல், கண்டறிந்ததுடன், அதற்கு செல்லுலோஸ் என்ற நாமகரணம் சூட்டியதும் அவரேதான். பின்னர் பாரிசில் பேராசிரியரானார். அமெரிக்க வேதியல் சங்கம் இன்றும் அவருக்கு மரியாதை செய்யும் முகமாக ஆண்டுதோறும் ஒரு பரிசைக் கொடுக்கிறது.

No comments:

Post a Comment