Thursday, February 23, 2012

வாழைத்தண்டு பச்சடி

வாழைத்தண்டு பச்சடி

by Mohana Somasundram on Sunday, June 26, 2011 at 10:15pm ·

வாழைத்தண்டு பச்சடி;

தேவையானவை:

  1. வாழைத்தண்டு................1/2 அடி நீளம்
  2. ரொம்ப புளிக்காத தயிர்..2 கப்
  3. சின்ன வெங்காயம்...........4
  4. பச்சை மிளகாய்/சிவப்பு மிளகாய் ...1
  5. இஞ்சி தேவையானால்.....1 /4 இன்ச் நீளம்
  6. பெருங்காயம்.......................ஒரு சிட்டிகை
  7. சீனி.........................................1 /4 தேக்கரண்டி
  8. எண்ணெய்...........................1 தேக்கரண்டி
  9. சீரகம் ..................................1 /4 தேக்கரண்டி
  10. கறிவேப்பிலை, மல்லி.....1 தேக்கரண்டி
  11. உப்பு.....................................தேவையான அளவு

செய்முறை:

  • வாயகன்ற பாத்திரத்தில் பாதியளவு நீர் எடுத்துக்கொண்டு,அதில் 1/4தேக்கரண்டி உப்பும், கால் தேக்கரண்டி தயிர்/மோர் போடவும். இந்த நீரில்தான் வாழைத்தண்டை நறுக்கிப் போடவேண்டும். இல்லை என்றால் வாழைத்தண்டு நறுக்கும்போதே கருத்துவிடும்.
  • இந்த தயிர் கலந்த நீரில்,வாழைத்தண்டைமெலிதாக நறுக்கி போட வேண்டும். நறுக்கும்போது அதிலிருந்து நார் வரும். அதனை அப்படியே ஆள்காட்டி விரலில் நூலாக சுற்றிக்கொள்ள வேண்டும். பின் அதனை பொடியாக நறுக்கி போடவேண்டும்.அல்லது வட்ட வட்டமாக மெலிதாக நறுக்கலாம்.
  • பின்னர் ஒரு படியை எடுத்து வாழைத்தண்டு பாத்திரத்தில் கவிழ்த்து வாழைத்தண்டின் மேல் குத்தி குத்தி எடுக்கலாம். தண்டு சிறு சிறு துண்டுகளாகிவிடும்.
  • அரை அடி நீளமான ஒரு குச்சி இரண்டாக ஒடித்துக் கொள்ளவும். அதன் நுனி சமமற்று அங்கங்கே நீட்டிக்கொண்டு பிசிர் பிசிறாக இருக்கும். அதனை அப்படியே வாழைத்தண்டு பாத்திரத்தில் நுழைத்து சுற்றவும். வாழைத்தண்டிலிருக்கும் நார் இந்த குச்சியில் சுற்றிக்கொள்ளும். தண்டில் நார் குறைந்துவிடும்.
  • தயிர் கட்டியில்லாமல் அடித்துக்கொள்ளவும்.
  • வெங்காயம் +ப.மிளகாயைப் பொடியாக நறுக்கவும்.
  • இஞ்சியை தட்டிப் போடலாம்/நறுக்கியும் போடலாம்.
  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் சீரகம் போட்டு சிவந்ததும், உடனேயே வெங்காயம், ப.மிளகாய் +இஞ்சி போட்டு நன்கு வதக்கவும்.
  • பின்னர் கறிவேப்பிலை மல்லியை நறுக்கிப் போட்டு இறக்கவும்.
  • வதக்கிய வெங்காயம், மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை + மல்லியை தயிரில் கொட்டவும்.
  • வேண்டிய உப்பு, சீனி + காயம் போட்டு சுவை பார்க்கவும்.
  • இந்த தயிரில் நறுக்கிய வாழைத்தண்டை வேக வைக்காமல் பச்சையாகப் போடவும்.
  • இதுதான் வாழைத்தண்டு தயிர் பச்சடி/ வாழைத்தண்டு ரைத்தா.

தேவையானால், இதன் மேல் கொஞ்சம் காராபூந்தி தூவி பரிமாறலாம்.. ! இது 5 ஸ்டார் மெனு ஆகி விடும்..! இது சாப்பிட படு சுவையாக இருக்கும்..! சாம்பார் சாதத்துக்கு நல்ல துணை.

வாழைத்தண்டின் பயன்கள்:

  1. இதில் நார்ச் சத்து இருப்பதால் வயிற்றுப் பிரச்சினைகளுக்கு மிகவும் நல்லது..!
  2. இதனை பச்சையாகவும் வேகவைத்தும் சாப்பிடலாம்.
  3. உடல் பருமன்/எடை குறைக்கவும், சிறுநீரக கற்களை அகற்றவும் வாழைத்தண்டு சாப்பிடலாம்.
  4. இதனை உண்பதன் மூலம் நீர் நன்கு பிரியும்,
  5. இது ஒரு மலமிளக்கி.
  6. இதில் அதிகமான பொட்டாசியமும், வைட்டமின் B6 ம் உள்ளது.
  7. இதிலுள்ள வைட்டமின் B6 , ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் உற்பத்திக்குப் பெரிதும் உதவுகிறது..
  8. மேலும் இது உடலின் தற்காப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  9. இதன் பொட்டாசியம்,இதய தசைகளை வலுவடையச் செய்கிறது.
  10. இதுவே, மிகை இரத்த அழுத்தத்தைக் கட்டுப் படுத்துகிறது.
  11. அதன் மூலம் உணர்வு நரம்பு களை செயல்படுத்தி, உடலின் திரவ சமன நிலைக்கு உதவுகிறது.
  12. வாழைதண்டில் கால்சியம், இரும்பு, மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவையும் அதிகமாக உள்ளன.
  13. இதில் அதிகமான வைட்டமின் C மற்றும் A உள்ளன.
  14. வாழைப் பட்டை தீக்காயத்திற்குச் சிறந்த மருந்து..!

.

ஆதிகால..ஆடம்பர வாழ்வியலை..வெளிச்சம் போடும்.. புதைவிடங்கள்..

ஆதிகால..ஆடம்பர வாழ்வியலை..வெளிச்சம் போடும்.. புதைவிடங்கள்..

by Mohana Somasundram on Thursday, July 21, 2011 at 3:12pm ·

சுன்கிரில் எடுக்கப்பட்ட கூட்டுப் புதைவிடம்

நம் முன்னோடிகள் ..!

நமக்கெல்லாம் மனித இனம், குரங்கு போன்ற ஒரு இனத்திலிருந்துதான் பிரிந்தது என்பது நன்றாகவே தெரியும். இந்த மனிதஇனம் தோன்றுவதற்கு ஆதார சுருதியான குரங்கினம் சுமார் 6 .5 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருந்தது.மனித இனத்தின் முதல் முன்னோடிகளான டிரையோபிதிகஸ் ( Dryopithecus) 3 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தன . .ஆனால் இன்றைய நவீன மனிதன் தோன்றி சுமார் 2,00,000 ஆண்டுகள் ஆகின்றன. மனிதன்தான், தான் மரித்துப் போனதும்,அதிலிருந்து வரும்துர்நாற்றத்தைப் போக்க , அந்த உடலை பல வகைகளில் அடக்கம் செய்தான். சில சமயம் புதைத்தான்; சிலர் கடலில் வீசி எறிந்தனர்.சிலர் மலை உச்சிக்கு எடுத்துக் சென்று அதனை கண்ட துண்டமாக வெட்டி, அங்கிருந்து வீசி ஆகாய சங்கமம் நிகழ்த்தினர். இவர்கள் மீண்டும் பிறக்க மாட்டார்கள் எனும் நம்பிக்கையுடன். பின்னரே மறுவாழ்வு உண்டு என்ற எண்ணம் கிரேக்கர்களிடம் உருவாகி இருந்தது.

கி.மு. 42,000 த்தில் புதைக்கப் பட்ட தாயும் சேயும்

புதைப்பதற்கு அகரம் போட்ட ..மனிதன் . !

நவீன மனிதனுக்கு முன் வாழ்ந்த நியாண்டர்தால் மனிதன்தான்,முதன் முதலில் இறந்த உடலைப் புதைத்து,புதையலுக்கு முன்னுரையும், அரிச்சுவடியும் எழுதியவன். இவர்களின் புதைவிடங்கள் ஈராக், இத்தாலி போன்ற இடங்களில் காணப்படுகின்றன.அவற்றின் வயது 1,30,000 இருக்கலாம்.ஆனால் ஸ்பெயினிலுள்ள அட்ட புயர்க்கா மலையில் (Atapuerca Mountains ) உள்ள குகையில், 32 மனிதர்களின் எலும்புகள் காணப்படுகின்றன. இவை சுமார் 30,00,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. . இருந்தாலும் கூட அந்தக் காலத்தில் கூட்டு புதைத்தல் அரிதானதே. இஸ்ரேலின் கியூபெச்க் ( Qafzeh hominids or Qafzeh-Skhul early modern humans ) என்ற இடத்திலுள்ள குகையில் கிடைத்த எலும்புகளைக் கொண்டு தாய் குழந்தை இருவரையும் சேர்த்து புதைத்துள்ளனர் என்பது தெரிகிறது .இதன் வயது 1 .30 ,000 .இவற்றின் எலும்புகள் பழுப்பு/சிவந்த வண்ணத்தில் உள்ளன.

பிரிட்டனின்.. ஆதி புதையல்..!

பனிஊழிக் காலம்தான், நவீன மனிதனை உலகுக்குக் காட்டிய காலகட்டமாகும். நவீன

மனித இனம் பழைய கற்காலத்தை ஒட்டி, பல பழக்க வழக்கங்களை கைக்கொண்டது .சுமார் 42 , 000, ஆண்டுகளுக்கு முன் சடங்குகள் உள்ள புதைவிடம் உருவாகப்பட்டது. ஆஸ்திரேலியாவிலுள்ள மூங்காஏரியில் உள்ள மனிதனின் அமைவிடம், மத/சமயச் சடங்குகளுடன் இணைந்தது. பிரிட்டனின் ஆதி புதையல் என்பது சுமார் 29,000 ஆண்டுகளு முற்பட்டது. இதனை சிவந்த பெண் என்று அழைக்க பப்ட்டது. ஸ்பெயினின் வடபகுதியில் 27 மனித எலும்புகள்,மற்றும் ஒரு கல் கோடரி உள்ள ஒரு புதைவிடம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

சுன்கிர் எலும்பும், உருவாக்கம் செய்த உடையும்

பழைய கற்கால மனிதன்.. வாழிடம்..!

சுன்கிர் புதைவிடங்கள்

(Sungir) என்ற இடத்தில் கிடைத்துள்ள கல்லறை/புதைவிடம் ஆகும்.கடை பழையகர்காலத்தின் தடயங்களாய் சுன்கிர் என்ற இடத்தின் 12 க்கும் குறைவான ஆதிகால் புதைக்கும் இடங்கள் உள்ளன. அந்தக்கால ரஷ்யாவுக்கு அருகில்தான் இந்த சுன்கிர் (Sungir) எனற மனிதர்களின் வாழிடம் இருந்தது. இதனை முதன் முதலில் ரஷ்யாவின் தொல்லியல் துறை நிபுணர் ஓ.என். பாடெர்(O.N .Bader)தான் 1956 ம் ஆண்டு கிழக்கு ஐரோப்பா பகுதியில் கண்டுபிடித்தார். இங்கிருந்துதான் முதன்முதல் வடகிழக்கே திரும்பி படுத்திருக்ககூடிய ஒரு முழுமையான கல்லறையை 1964 ல் தோண்டி எடுத்தனர். இது பழைய கற்காலத்தின் கடைசி காலத்தைச் சேர்ந்தது.இதன் வயது சுமார் 28 000, -30,000 ஆண்டுகள் என ரேடியோ கதிர்வீச்சு முறையில் கண்டறிந்துள்ளனர். மேலும் அவர்கள் பூமியின் உயர்நிலப் பகுதிகளில் வாழ்ந்தனர். அந்தக் கால பூமியின் நிலைகளை ஆயும்போது, அப்போது கடுமையான குளிரும், வறண்ட குளிர் காற்றும்,செங்குத்தான காடுகளும், சரிவான நிலவமைப்பும் இருந்ததாய் தெரிகிறது.அப்போதைய பழைய கற்காலத்தின் வயது 26,00,000 -30,000 வரை இருக்கலாம் என்று கருதப்படுகிறது,பழைய கற்காலத்தை முதல்,இடை,கடை கற்காலம் என்று பிரிக்கின்றனர் .இங்கு பெரும்பாலும் பழைய கற்கால மக்கள் வசித்த, வாழ்ந்த அடையாளங்கள் காணப் படுகின்றன..

பனி ஊழிக்கால,,சுன்கிர் மனிதன்..!

தனிப் புதைவிடம்

மாஸ்கோவிலிருந்து சுமார் 192 கி.மீ தொலைவில் விளாதிமிர் என்ற நகரம் இருந்தது. அதன் சுற்றுப் புறங்களில் மனிதர்களின் வாழிடம் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. அந்த வாழிடங்களில் ஒன்றுதான சுன்கிர் அங்கே கிளியஸ்மா ஆற்றின் இடது பக்க் கரையில்,1957-1964 வரை சுமார் 1 .500 ச.மீ அகழ்வாராய்ச்சி செய்து பார்த்தனர். அப்பகுதியில் ப்ழையகற்காலத்தின் இடைப்பட்ட காலத்தில், நாகரிகம் மற்றும் கலாச்சர வளர்ச்சி ஏற்பட்ட தடயங்கள் கிடைத்துள்ளன. சுன்கிர் என்ற இடத்தில் எடுக்கப்பட்ட மனித எலும்புகள், மதச் சடங்குகள்/சமய பரிவர்த்தனைகள் செய்யும் இடம்தான் அது என்பதற்கான மிக அற்புதமான தடயமாய் மிளிர்கிறது. இப்பகுதிதான் ஐரோப்பாவின் மிகப் பழமையான மனிதகுலச் சான்று.இவர்கள் கடை ஊழிக்காலம்/ உறை பனிகாலத்தில் (Glacial period ) வாழ்ந்தனர் என்பதும் தெரிய வருகிறது.

புதைவிடப் பொருட்களும்.. வாழ் நிலையும்..!

பழைய கற்காலத்தின் கடைப் பகுதியில், சுன்கிரின் கருவிகள்

நரிப் பல் கோர்த்த பாசி மாலை

கம்பளி தந்த குச்சிகள்

சுன்கிர் வாழிடம்,உறை பனி மற்றும் பனிப்பாளங்களின் கீழே. ஆயிரக்கணக்கான மீட்டர் ஆழத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டவை ஆகும். சுன்கிர் என்ற இடத்தில், அந்தப் புதைவிடங்களில் வீடுகளின் கட்டுமானப் பொருட்கள், சேமிப்புப் பொருட்கள்/குழிகள் , உற்பத்தி சாதனங்கள்/கருவிகள், அவர்கள் வேட்டையாடும் ஈட்டிகள், நீண்ட தந்தங்கள், விலங்குகளின் உருவங்கள்,கம்பளி யானையின் தந்தங்களிலிருந்து உருவாக்கப்பட்ட பாசிகள் பொதிக்கப்பட்ட/

தைய்க்கப்பட்ட ஆடைகள், போன்றவை இருந்தன.பாசிகள் இருந்த நிலை மூலம் அவர்களின் ஆடைகள் எப்படி வெட்டப்பட்டு,புனையப்பட்டுள்ளன என்பதைத் தெளிவாக காட்டின. புதைவிடங்களில் கிடைத்த எலும்புகளின் மேல் இருந்த தந்தங்களிலான பாசிகள், கங்கணங்கள், தொங்கட்டான்கள், பதக்கங்கள், டாலர்கள் போன்ற பொருட்களை கம்பளி யானையின் தந்தங்களிலிருந்து செய்திருந்தனர். இந்த ஆதிகால மனிதர்கள், சந்திரன் மூலம் காலத்தைக் கணக்கிடும் காலண்டர் முறையை அறிந்திருந்தனாறாம். சுன்கிர் என்ற இடத்திலிருந்து எடுத்த மனித எலும்புகளை 2004 ல், அருங்காட்சியகத்தின் மூலம் மரபணு சோதனைக்கு உட்படுத்தினர். இதில் முதல் இரண்டு எலும்புகளும் ஆண்களுக்கு உரித்தானவை. மூன்றாவதில் உள்ள எலும்பு சின்னப் பெண்ணினுடையது எனத் தெரிவிக்கப்பட்டது.

சுன்கிர்... எலும்புகளின்.. தன்மைகள்..!

சுன்கிர் பெண்ணின் தலை

சுன்கிரில், சிதைந்துபோன 5 வாழிடங்களையும்,அதன் 5 எலும்புகளையும் கண்டுபிடித்துள்ளனர். இவற்றில் ஒன்று 60 வயதான முதிர்ந்த மனிதன், 13 வயது பாலகன், 7 -9 வயது பெண் குழந்தை, பாலினம் தெரியாத ஒரு உடல், தலையற்ற ஒரு முண்டத்தின் எலும்பு மற்றும் ஒரு பெண்ணின் தலைஎலும்பு முதலியவை கிடைத்துள்ளன. கிடைத்துள்ள சான்றுகளைப் பார்க்கும்போது, அந்த இடங்கள் பெரியோர்களின் புதைவிடம் எனபது தெளிவாய் தெரிகிறது. இரண்டு பருவ வயது ஆண்களின் உடல்கள் மற்றும் வயது முதிர்ந்த ஆண் என்ற மூவரும் ஆழம் குறைவான பள்ளங்களில் மூன்று மீட்டர் இடைவெளியில் புதைக்கப் பட்டிருந்தன. அவை தரைக்கு கீழே..மண்ணுடன் பனி கலந்த இடத்தில் கிடைத்தன. இந்த மூன்று

எலும்புகளில் ஒருவர் , கைகளை இடுப்புப் பின் பக்கம் கட்டியபடி குப்புற கிடந்தனர். நான்காவது பெண்ணின் எலும்பு தனியாக, குறைவான பதப்படுத்தளுடன், ஒரு கல் மேடைக்கு அருகில் மண்டையோடு சிவப்பு மண் பூச்சுடன், ஆணின் எலும்புக்கு அருகிலேயே, உறவினர் என்று கருதும் வண்ணம் காணப்பட்டது. தலையற்ற முண்டமும் சரியாக பதப்படுத்தப் படவில்லை. எனவே, அதன் எலும்புகள் முழுமையாய் கிடைக்கவில்லை. ஒன்றாய் புதைக்கப் பட்ட தம்பதியர்இரண்டு பருவ வயதினரும், தலைகள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டு,இடையில் வட்டமான ஒரு பொருளுடன், புதைக்கப் பட்டிருந்தன. அவை தம்பதியர்.

ஆடம்பர...வாழ்வியல் நிறைந்த .. மனிதர்கள்..!

சேர்ந்தாற்போல மூன்று எலும்புகள் கிடைத்த இடத்தில், அவை மிக மிக ஆடம்பரமாய் அலங்கரித்திருந்தனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த எலும்புகளில் ஆயிரக்கணக்கான தந்தத்தால் செய்யப்பட்ட பாசிகள் கோர்க்கப்பட்ட பட்டைகள் உடலின் குறுக்கும் நெடுக்காக காணப்பட்டன. ஒருக்கால் அவை அவர்களின் உடைகளின் மேல் போடப்பட்டதே கூட இருக்கலாம். சுன்கிரில் கிடைத்த எலும்புகளில் கட்டாயம் மூன்று நிச்சயமாய் ஒரே சமூக கட்டமைப்பை சேர்ந்தவராக இருந்தவராக இரக்க வேண்டும் என்பதும் தெரிய வருகிறது. அங்கு கிடைத்த எலும்புகளில் உடல் அலங்காரம் மற்றும் கல்லறை படையல்களில் பெருத்த மாறுபாடு உள்ளது. அந்த ௬௦ வயது மனிதனின் எலும்பில் 2936 மணிகளும், பலவகைப் பட்டைகளில் குறுக்கும் நெடுக்காக,தலைத் தொப்பி, முன்பகுதி , கை,கால்கள், இடுப்பு என பல இடங்களில் கட்டப்பட்டுள்ளன. தலையில் நரிப் பற்கள் பல பதித்த ஆபரணப் பட்டை கட்டப்பட்டுள்ளது. தலையும் தலையும் ஒட்டி படுக்க வைக்கப்பட்டு புதைக்கப்பட்டுள்ள எலும்புகள் கணவன் மனைவியாய் இருக்க வேண்டும்.௧௩ வயது பையன் 4,900 பாசிகள், நரிப் பல் மற்றும் தொப்பி இத்யாதி களுடன் இருந்தான். இவன் நரியின் சிங்கப் பற்கள் 250 பதித்த இடுப்பு பட்டை கட்டியிருந்தான். நெஞ்சில் கம்பளி யானையின் தந்தத்தால் செய்த டாலர் கம்பளி யானை உருவில் இருந்தது.9வயது எலும்பு சிறுமியுடையது. அதில் 5 ,200 பாசிகள் இருந்தன. ஆனால் நரிப் பல் கிடையாது; கழுத்தணியும் கிடையாது. .

சுன்கிர் புதைவிடங்கள் ஆய்வு

தந்தப் பாசிகளும், குளிருக்கு அடக்கமான தோலுடையும்..!

மனிதனின் முன்கையில் காணப்படும் அலங்கார பாசிகள் கம்பளி யானையின் தந்தைகள் மூலம் செய்யப்பட்டவை. சிலவற்றில் கருப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளன. . நீள வாக்கில் வெட்டப்பட்டு, துண்டுகளின் முனையில் துளையிடப்பட்டு, அவற்றை ஒன்றாக கோர்த்து கழுத்தில் அணிகலனாக கட்டியுள்ளனர். ஆணின் கழுத்தில் சின்ன பதக்கம்/தொங்கல் காணப்படுகிறது. அதில் சிவப்பு மற்றும் கருப்பு வண்ணங்கள் பூசப்பட்டுள்ளன. கிடைத்த எலும்புகளை ஆய்ந்ததில் அம்மனிதர்கள் எப்படி உடை உடுத்தி இருந்தனர் என்பதும் தெரிய வந்துள்ளது. அவர்கள் தோல் ஆடையை குளிருக்காக அணிந்தனர். அதில் தந்த பாசிகளைக் கொண்டு அலங்கரித்திருந்தனர்.கால்களிலும் தோல் உறைதான். அனைத்தும் தந்தப் பாசி அலங்காரம்தான். இவை அவர்கள் செல்வச் செழிப்புடன் இருந்தனர் என்பதற்கான தடயங்கள் இவை .கம்பளி யானையின் தந்தங்களால் வசிப்பிடமும் அமைத்துக் கொண்டனர்.பாசிமணிகளைச் செய்து துணியில் தைத்தல்ஆனால், ஒரு பாசி செய்யவே பல நூறு மணிகள் ஆகலாம். ஏனெனில் அப்போது அவைகளை உருவாக எந்த வித கருவியும் இல்லை ..! இன்றைய நவீன அறிவயல் ஆய்வு மூலம், கிடைத்துள்ள எலும்புகளிலிருந்து, அவற்றின் முகம், உடை எப்படி இருக்கும் என்பதை கண்டறிந்து கணினி மூலம் அனைவரும் காணும் வண்ணம் தந்துள்ளனர். இந்தனை கண்டுபிடிப்புகளும், அவன் வாழ்ந்த காலத்தின் உடையை, உரைவிடத்தன்மையை,வருடங்களை, வாழ்வியலை கண்டுபிடித்தது அறிவியலே..!அறிவியலில் ஆற்றல், தன்மை ,எழுச்சி, மற்றும் வீச்சு அளப்பரியது.

ஒன்றாய் புதைக்கப் பட்ட தம்பதியர்

சுன்கிரின் எலும்புகள், அணிகலன்கள், உடை

சுன்கிர் புதைவிடம்

எலும்பிலிருந்து உருவகிக்கப் பட்ட ஆண் உருவம்

சுன்கிர் ஆண்

சுன்கிர், வேட்டையாடி

சுன்கிர் மக்கள் வாழ்ந்த கம்பலி யானை தந்தத்திலான வீடுகள்

தந்தை பெரியாரின் 133 வது பிறந்த தினம்.. செப்டம்பர் ..17

தந்தை பெரியாரின் 133 வது பிறந்த தினம்.. செப்டம்பர் ..17
by Mohana Somasundram on Saturday, September 17, 2011 at 5:36pm ·
வியாபாரி..பெரியார்
Photo 17>
பெரியார் சிறுவனாக குடும்பத்துடன்
பெரியாரின் தாய், தந்தை
தந்தை பெரியார் என நம்மால் அன்புடனும், மரியாதையுடனும் அழைக்கப்படும் பெரியாரின் இயற்பெயர் ஈரோடு வேங்கட இராமசாமி என்பதாகும். பெரியார் அன்றைய கோவை மாவட்டத்துடன் இணைந்த ஈரோடு நகரில் 1879 , செப்டம்பர் 17 ம் நாளில் பிறந்தார். இவரின் தந்தை வெங்கடப்ப நாயக்கர் ஒரு வியாபாரி. அன்னையின் பெயர் சின்னத் தாயம்மாள். 1929 ல், பெரியார் தனது சாதிப் பெயரான நாயக்கர் என்பதை நீக்குவதற்காக ஓர் அறிக்கை வெளியிட்டார் . பெரியார் பள்ளிப் படிப்பை 5 ஆண்டுகள் வரைதான் முடித்தார். அதன் பின் 12 வது வயதில் தந்தையுடன், வியாபாரத்தில் ஈடுபட்டார். அவரது தந்தையின் பெருந்தன்மையான குணங்களைக் கண்டு வியந்தார். சாதி, சமூகம், மாதம் என்பதெல்லாம் , அடித்தட்டு மக்களை, ஏமாற்றும் முகமூடி என்பதை சிறுவயதிலேயே உணர்ந்து அவற்றை அகற்றவும், மூட நம்பிக்கைகளை மக்கம் மனதிலிருந்து உடைத்தெறியவும் சிறுவயதிலிருந்தே போராடியவர்.பெரியார் பிறந்த இல்லம்
செல்வ செழிப்பில் பெரியார்
சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர்
இவர் வசதியான, உயர்சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம்கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். இம்மனநிலை வளரக்கராணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையே, அந்த மூடநம்பிக்கைக்கு காரணமாக இருப்பது கடவுள் நம்பிக்கை, கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதை கருத்தில் கொண்டு ஈ.வெ.ரா, தீவிர நாத்திகராக இருந்தார்.இந்திய ஆரியர்களால், தென்னிந்தியாவின் பழம்பெருமைவாயந்த திராவிடர்களை பார்ப்பனரால்லாதார் என்ற ஒரு காரணத்தினால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர்களின் வாழ்வுச் சுரண்டப்படுவதையும் பெரியார் எதிர்த்தார்.

அவர் தமிழ்ச் சமூகத்திற்காக செய்த புரட்சிகரமான செயல்கள் என்றால் , தமிழகத்தில் மண்டிகிடந்த சாதிய வேறுபாடுகளை குறிப்பிடத்தக்க வகையில்அகற்றினார். தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு பெரியார் குறிப்பிடத் தக்க பங்காற்றியுள்ளார். இவரின் சமுதாயப் பங்களிப்பை பாராட்டி யூனஸ்கோ (UNESCO) நிறுவனம் 1970, ஜூன் 27ல்,"புத்துலக தொலை நோக்காளர், தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி" என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது

. தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத்தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும்,பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது.இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதை கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பலத் தாக்கங்களை ஏற்படுத்தியவை.இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ.இராமசாமி நாயக்கர், தந்தை பெரியார்என்ற பெயர்களாலும் அறியப்படுகிறார்.
"ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்"..periyaar .

93 வயதில் பெரியார்"உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் "..தந்தை பெரியார்.
"தமிழ் என்பதும்,தமிழர் கழகம் என்பதும் மொழிப் போராட்டத்துக்குத்தான் பயன்படுமே தவிர, இனப் போராட்டத்துக்கோ, கலாச்சார போராத்திற்கோ சிறிதும் பயன்படாது. "(விடுதலை 27 .01 .1950). எனவேதான் தமிழர் கழகம் என்பதிற்குப் பதிலாக திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டினார்.
அனைத்து திரவிட இயக்கங்களுக்கும் தந்தை பெரியார் ஆதர்ச சகிதியாக விளங்குகிறார். ஆனால் அவரது கொள்கைகளைக் முழுதும் கடைப் பிடிக்காமல், அவர் பெயரை ஊறுகாய் போல பயன்படுத்தி வருகின்றனர்.
பெரியார்+நாகம்மை
பெரியார்+ மணியம்மை
பெரியாரின் தந்தை அவருக்கு மணம் பேசும்போது பெரியாரின் வயது 19 . மணப்பெண் நாகம்மையின் வயது 13 . இது ஒன்றும் முழுமையாக பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணம் அல்ல. ராமசாமியும் நாகம்மையும் ஒருவரை ஒருவர் முன்பே விரும்பபினர். திருமணத்துக்குப் பின், நாகம்மை கணவருக்கு அவரின் அனைத்து செயல்களிலும் உறுதுணையாக இருந்தார். இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. 5 மாதம் மட்டுமே உயிர் வாழ்ந்தது. ஆனால் நாகம்மை 1933 ல் இயற்கை எய்தினார். பெரியார் 1949 ல் மணியம்மை என்பவரை மணமுடித்தார். அவர் பெரியாரின் மறைவுக்குப் (1973 , டிசம்பர 24 )பின்னும் அந்த இயக்கத்தில் அவரின் கொள்கைகளை முன்னின்று நடத்தினார்.
முகம்மது அலி ஜின்னா,அம்பேத்கார் & பெரியார்
பெரியார் 1919 ல், இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். கேரளாவின் சின்ன நகரமான வைக்கம் (இன்றைய திருவனத்தபுரம் ) என்ற இடத்தில், தலித்களின் மீது ஆதிக்க சாதியனர் செய்த தீண்டாமைக்காகவும், கோவிலில் நுழைய அனுமதிமறுப்பிற்காகவும், 1924 ம் ஆண்டு, சத்யாகிரக இயக்கத்தை நடத்தினார். இதற்காக பெரியாரை வைக்கம் வீரர் என்றும் அழைக்கப்படுகிறார். ஆனால் 1925 ல், காங்கிரஸ் பிராமணர்களுக்கு மட்டுமே ஆதரவாக இருப்பதாக நினைத்தார். 1929 -1932 வரை மலேசியா, ஐரோப்பா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுக்குச் சென்று சுற்றிப்பார்த்தார். அனாடுகளின் பழக்க வழக்கங்கள் அவர் மனதைப் பாதித்தனர். அதனால் மிகவும் மனமாற்றம் அடைந்தார். பின்னர் 1939 , நீதிக் கட்சியைத் துவக்கினார். அதனையே பின்னாளில் 1944 ல் திராவிடக் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்தார். பேரறிஞர் அண்ணாதுரைக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், 1949 ல் , அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். இவர்கள் தனி திராவிட நாடு கோரிக்கையும் முன் வைத்தனர். பின்னர் அது கைவிடப் பட்டது.
பெரியார் ரஷயாவில் துப்புரவு தொழிலாளர்களுடன் பெரியார் பகுத்தறிவுக் கொள்கைகளையும், சுயமரியாதை இயக்கத்தையும், பெண்களின் உரிமையும் மற்றும் சாதி ஒழிப்பையும் முன் நிறுத்தி பரப்பினார். பெரியார்தான் இவைகளின் ஆசான்; முன்னோடி.பெரியார் இல்லை என்றால் இப்படிப்பட்ட சாதி மறுப்பு& ஒழிப்பு இயக்கங்கள் இவ்வளவு விரைவில் நடந்திருக்காது . தமிழகத்தில் சாதி ஒழிப்பு என்ற புரட்சி விதையைத் தூவியவர் பெரியார்தான். இன்றைய தமிழ் எழுத்துக்களில் உள்ள மாற்றமும் பெரியாரால் ஏற்பட்டதுதான். இல்லை என்றால், இந்த லை/ளை/னை / ணை போன்றவைகளின் உருவ அமைப்பு வேறு மாதிரி ஒன்றுடன் ஒன்று இணைத்து ஒரே எழுத்தாக இருக்கும்.
கடவுள் மறுப்புக் கொள்கை உருவாக்கம்..!
காசியில்..பெரியார்
துறவி பெரியார்
காசி விஸ்வனாதராகிய சிவனைக் காண 1904 ல் காசிக்குச் சென்றார். காசி இந்துக்களின் புண்ணிய நகரம்/புனித நகரம் என்று சொல்லப்பட்டாலும், அங்கும் அநியாயங்களும், பிச்சை எடுப்பதும், நீதிக்குப் புறம்பான நிகழ்வுகளும், மனிதர்கள் குளிக்கும் இடத்திலேயே, பிணங்கள் மிதந்து செல்வதையும் பார்த்து மணம் நொந்து போனார். இந்துத்துதுவம் சொல்லி மனிதர்களை சுரண்டுகிறார்கள் என மணம் கொதித்து எழுந்தார். ஒருநாள் காசியில் நடந்த நிகழ்வுதான், பெரியாரின் கொள்கைகளையே 360 டிகிரியில் திருப்பி போடும் அளவுக்கு அவரைப் பாதித்தது. வழிபாடு நடக்கும் இடத்தில் ஒரு சத்திரத்தில் வந்திருந்தோருக்கு உணவு வழங்கப்பட்டது.ஆனால் பெரியார் அங்கு சென்றால் உணவு மறுக்கப்பட்டது, அவர் பிராமணர் இல்லை என்பதற்காக. அவருக்கோ.. ஏராளமான பசி. கையில் காசில்லை. அவர் பிராமணர் போல, பூணூல் பொட்டுக் கொண்டு, உன்வவு வாங்கப் போனார். ஆனால் அவரிடம் இருந்த முரட்டு மீசை அவர் பிராமணர் இல்லை என்பதை வெளிச்சம் பொட்டுக் காட்டியது.மீண்டும் உணவு மறுக்கப் பட்டது. அந்த கால வழக்கப்படி, பிராமணர்கள் மீசை வைத்துக்கொள்வது மறுக்கப் பட்ட காலம்.எனவே, பெரியார் பசியின் கொடுமை தாங்காமல், ரோடு ஓரத்தில் கிடந்த எச்சில் இலையில் மீதம் இருப்பதை எடுத்து உண்டார், இதில் கொடுமை என்னவென்றால் அந்த சத்திரத்தை க் கட்டிய சொந்தக்காரர் பிராமணர் அல்லாதவர் .
தந்தை பெரியாரின் இறுதி நிகழ்வு
காசிக்கு கடவுள் உண்டு என்ற கொள்கையுடன் காசிக்குக் சென்ற ராமசாமி . கடவுள் மறுப்புக் கொள்கையுடன் திரும்பினார்.
இந்தி எதிர்ப்பு போராட்டத் தையும் நடத்தினார். கலப்பு திருமணங்களையும், சுயமரியாதை திருமணங்களையும் நடத்தியவர்.
1973, டிசம்பர் 24 ல் தனது 93 வது வயதில் இயற்கை எய்தினார்.







சுயமரியாதை பெரியார்
வைக்க்டத்தில் பெரியார் சிலை

அக்டோபர் 4 ..வேதியலாளர் கெனிச்சி ஃப்யூகி Kenichi Fukui).யின் பிறந்த தினம்

அக்டோபர் 4 ..வேதியலாளர் கெனிச்சி ஃப்யூகி Kenichi Fukui).யின் பிறந்த தினம்

by Mohana Somasundram on Tuesday, October 4, 2011 at 4:51am ·

கெனிச்சி ஃப்யூகி(Kenichi Fukui)

ரோயல்டு ஹாப்மேன் (Roald Hoffmann

இன்று அக்டோபர் 4 ம் நாள், வேதியலுக்கான நோபல் பரிசினை, 1981 ம் ஆண்டு ரோயல்டு ஹாப்மேனுடன் (Roald Hoffmann) பகிர்ந்து கொண்ட கெனிச்சி ஃப்யூகி (Kenichi Fukui) (Fukui Ken'ichi, October 4, 1918 – January 9, 1998) பிறந்த தினம். கெனிச்சி ஒரு கோட்பாடியல் வேதியலாளர்(theoretical chemist). தனது வாழ்நாள் முழுவதும், வேதிவினைகளின் இயற்கைத்தன்மையை விளக்குவதற்காகவே செலவிட்டவர். மற்ற வேதியலாலர்களிடமிருந்து கெனிச்சியின் பணியும், ஆய்வும் மிகவும் வித்தியாசமாக இருந்தது.மூலக்கூறுகளிடையே ஆன இணைப்பு கெனிச்சி வேதிவினைகளின் தன்மையை அதன் கணித அமைக்குகள் மூலம் நிரூபித்தார். மேலும், அவரது பெரும்பாலான பங்களிப்புக்கள் இயற்பியலின் குவாண்டம் கொள்கைக்கும், அதன் கணித கொள்கைக்கும் இடையிலுள்ள தொலைவை/இடைவெளியை நிரப்பும் பாலமாகவே இருந்தன. அதிலும் முக்கியமாக அணுக்களும், மூலக்கூறுகளும் எப்படி இயங்குகின்றன என்பதை விளக்குவதாகவே இருந்தன. கெனிச்சி வேதிவினைகளை எளிதில் புரிந்து கொள்ளுமாறும், அதன் செயல்பாட்டை இயல்பு முறைப்படி முன்கூட்டியே கணிப்பதையும் எளிதாக்கினார். ஆய்வுஅதற்காகவே கெனிச்சிக்கு வேதியலின் நோபல் பரிசு அர்ப்பணிப்பு நிகழ்ந்தது.

கெனிச்சி ஃப்யூகி ஜப்பான் நாட்டிலுள்ள ஹோன்ஷூ (Honshu)தீவில் நாரா (Nara) என்ற இடத்தில் 1918 ம் ஆண்டு அக்டோபர் 4 ம் நாள் பிறந்தார். சியி மற்றும் ரியோகிச்சி( Chie and Ryokichi ) தம்பதியரின் முதல் மகவு கெனிச்சி ப்யூகி . அவரது தந்தை சியி ஒரு வியாபாரி மற்றும் தொழிலதிபர்; தனது மகனின் எதிர்காலத்தை மிகவும் அக்கறையுடன் கவனித்துக் கொண்டார். அவர்தான் மகன் கெனிச்சி ப்யூகியை வேதியல் படிக்கத் தூண்டினார். ஆனால் கெனிச்சி ப்யூகிக்கு வேதியலில் துளிக்கூட ஆர்வம் இல்லை. தந்தைக்காவே பின்னர் பலகளியில் வேதியல் படித்தார். ௧௯௪௧ ம் ஆண்டு பட்டம் பெற்ற கெனிச்சி ப்யூகி, அவரின் பெரும்பாலான் நாட்களை, இரண்டாம் உலகப் போரின் போது எரிபொருள் ஆய்வகத்திலேயே , செயற்கை எரிபொருள் உருவாக்குவதிலேயே செலவிட்டார். பின்னர் 1945 ல் க்யோடோ பல்கலையில்(Kyoto University ) பேராசியராக பணி செய்தார். ௧௯௪௮ ல் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளிடையே ஆன இணைப்பு எப்படி தொள தொளப்பாக எலெக்ட்ரான்களால் (molecules share loosely bonded electrons) uruvaakitrathu என்பதைக் கண்டுபிடித்த்ஹார் . அவைகளை முன்னோடி ஆபிட்டல்கள் /சுற்றிகள் (frontier orbitals - orbital is a mathematical function that describes the wave-like behavior of either one electron or a pair of electrons in an atom) என்றும் அழைத்தார். இதற்காகவே இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

கெனிச்சி ஃப்யூகி 1947 ல் டோமோ ஹோரி என்பவரை மனம் புரிந்தார். இவர்களுக்கு ஒரு ஆண் மகவும், ஒரு பெண் மகவும் இருந்தன. கெனிச்சி ஃப்யூகி தன் ஓய்வுநேரத்தில் நடைப்பயிற்சி,மீன் பிடித்தல் மற்றும் கோல்ப் விளையாடுதளில் செலவு செய்வார்.. கெனிச்சி ஃப்யூகி 1970 களில் அமெரிக்க தேசிய நிறுவனத்தின் அயல்நாட்டு மூத்த வெளிநாட்டு அறிஞராக நியமிக்கப்பட்டார். 1973 ல் ஐக்கிய அமெரிக்க நாட்டின் மிகச் சிறந்த விஞ்ஞானியாக் பங்கு பெற்றார். 1978 &1979 ல், ஜப்பானின் வேதியல் கழகத்தின் துணைத் தலைவராகவும், பின் 1983 to 1984 ல் தலைவராகவும் பணியாற்றினார். பின்னர் சர்வதேச குவாண்டம் மூலக்கூறு அறிவியல் கழகம் , ஐரோப்பிய கலை, அறிவியல் & மனிதவியல் கழகம் மற்றும் அமெரிக்க கலை &அறிவியல்கழகத்தின் உறுப்பினராகி( International Academy of Quantum Molecular Science and honorary member of the International Academy of Science.) பல்வேறு பெருமைகளைப் பெற்றார். அவரது கொள்கையும் & எண்ணமாவது:"Industry is more likely to put its research effort into its daily business. It is very difficult for it to become involved in pure chemistry. There is a need to encourage long-range research, even if we don't know its goal and if its application is unknown.". கெனிச்சி ஃப்யூகி நினைவிடம்

நியூட்ரான் கண்டுபிடிப்பாளர் ஜேம்ஸ் சாட்விக்கின் பிறந்த தினம்..அக்டோபர் 20

by Mohana Somasundram on Thursday, October 20, 2011 at 3:06am ·

உலகிலுள்ள எந்த பொருளாக இருந்தாலும் , அது ஓர் அடிப்படையாய் ஒரு சின்ன பொருளுடந்தான் உருவாகி இருக்கமுடியும் . அனைத்துப் பொருள்களின் அடிப்படை அலகு /கட்டமைப்பின் காரணி அணு என்பதை ஒரு நூற்றாண்டுக்கு முன்னர்தான் கண்டுபிடித்தர்னர் . அணுவினைக் கண்டுபிடித்த பின் , அதன் துல்லியமான எடையை நிர்ணயிக்க அதன் உட்பொருள்கள் உதவுகிறது என்று அறிந்தனர்.அவை புரோட்டான், எலெக்ட்ரான் மற்றும் போட்டான் என்று தெரியும்.இதில் புரோட்டான் தான் அணுவின் எண்னை நிர்ணயிக்கும் காரணியாகும். அதன் பின்னும் கூட, அணுவின் எடை நிரனயிப்பு எனது ஒரு சீ-சா புதிராகவே இருந்தது நியூட்ரான் கண்டுபிடிப்பு வரை. இந்தப் புதிருக்கு விடை கண்டு பிடித்துக் கொடுத்தவர் ஜேம்ஸ் சாட்விக்(Sir James Chadwick CH FRS (20 October 1891 – 24 July 1974) ) என்ற ஆங்கிலேய விஞ்ஞானியே..!.

ஜேம்ஸ் சாட்விக் இந்த நியூட்ரானை 1932 ல் கண்டுபிடித்தார்.அப்படி ஒரு பொருள் இருக்கலாம் என 1924 லிருந்தே சந்தேகித்தாலும், அதனை நிச்சயமாக அறியமுடிந்தது அதன் பின் ௮ ஆண்டுகளுக்குப் பிறகு 1932 ல். அதற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசினை 1935 ல் பெற்றார். ஜேம்ஸ் சாட்விக்கின் கண்டுபிடிப்பு உட்கரு இயற்பியலில் ஒரு மிகப் பெரிய சாதனையை நிகழ்த்தியது. அதன் கடினமான, ஊடுருவி வினவும் வினாவுக் கெல்லாம் பதிலையும் தந்தது.உட்கருவியலில் உட்கருவின் தன்மை மற்றும் அதன் ஆற்றலை அறியவும் வழி கோலியது. இந்தக் கண்டுபிடிப்பு அணுப் பிளவுக்கும்(nuclear fission) பெரிதும் உதவியது. இதன் பங்களிப்பால்தான்,யுரேனியம் 235 உடைக்கப்பட்டது இதன் ஆற்றலால்தான். அணுகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு, ஜப்பான் மீதும் வீசப்பட்டதை நாம் மறக்கமுடியுமா?

ஜேம்ஸ் சாட்விக், 1891 , அக்டோபர் 20 ம் நாள் இங்கிலாந்தின் மான்செஸ்டரில் பிறந்தார். ஜான் ஜோசப் (John Joseph ) & அன்னிமேரி வோவேல்ஸ் சாட்விக் (Anne Mary Knowles Chadwick.)தம்பதியரின் முதல் மகvuப் ஜேம்ஸ் சாட்விக்தான். மான்செச்டரிலும், கலிபோர்னியா பலகலையிலும் பயின்றார். ஜேம்சுக்கு பிடித்தமான பப்டம் கணிதம்தான். ஆனால் இயற்பியல் திட்டத்தில் இணைக்கப்பட்டார். இந்த தவறைத் திருத்திக்கொள்வதில் கூட கூச்ச சுபாவத்தினராய் இருந்தவர் ஜேம்ஸ். ௧௯௧௧, இயற்பியல் பட்டம்.பின் அணுவினை உடைக்க முடியாது என்று சொன்ன எர்னஸ்ட் ருதர்போர்டின் ஆய்வகத்திலேயே கல்வியைத் தொடர்ந்தார். 1913 ல் இயற்பியல் முதுகலைப் பட்டம் பெற்றார். அவருக்கு அவரின் திறமை பார்த்து ஒரு உதவித்தொகை வழ்னக்ப்பட்டது அதில்ய்ஹான் அவர் படிப்பையும் ஆராய்ச்சியையும் செய்தார். .

. ருதர்போர்ட் அணுவுக்கு ஒரு நேர் ஆற்றல் உள்ள பொருள் உண்டு அதுதான் உட்கருவின் புரோட்டன் என்றனர் . இயற்பியலாளர்கள், அதைத்தவிர வேறு அதிகப்படியான பொருள் உள்ளனவா என்றும் தேடிக் கொண்டிருந்தனர். அணுவுக்குள் மறைந்திருக்கும் ஆற்றலை, அதன் துளியூண்டு எடைக்கு காரணி நியூட்ரானக் கண்டுபிடித்தது ஜேம்ஸ். அணுவின் கட்டமைப்பு கண்டறிந்ததும் அழிவுக்கு மட்டுமல்ல ஆக்கத்துக்கும் அணுவினைப் பயன்படுத்துவது அறியப் பட்டது. அதுதான் அணு உலைகள் மூலம் உருவாக்கப்படும் மின் உற்பத்தி ..!

நாய்க் கடியும்..நாமும்..!வெறிநோய் சிகிச்சையும்.. தடுப்பு நடவடிக்கையும்..!

நாய்க் கடியும்..நாமும்..!

by Mohana Somasundram on Wednesday, October 5, 2011 at 7:19pm ·

வேலுவின்.. வெறி நோய்..!

வேலுத்தம்பிக்கு நாய் கடித்ததா ?

நேற்று வேலுத்தம்பிக்கு நாய் கடித்துவிட்டது.

பதறிப்போய் “எங்கே?” என்று கேட்டேன்.

அவன் கவலையே படாமல் ஒரு பதில் சொன்னான்.

பதிலைக் கேட்டதும், இன்னும் கொஞ்சம் பதற்றம் அதிகப்பட்டதுதான் மிச்சம்.

என்ன என்று கேட்கிறீர்களா?

வேலுவுக்கு நாய் கடித்த இடம்.. வயிறு..! எப்படிடா இப்படி வயிற்றில் போய் கடித்தது என்றால்,அதற்கும் கவலைப் படாமல் சிரித்துக்கொண்டே "அது விளையாடியதா? அப்படியே வயிற்றில் ஒரே ஒரு கவ்வு..அது குட்டிதான்" என்றான்.

"அதுசரி, அந்த நாய்க்கு வெறிநோய்((Rabies prevention /Anti-rabies)

ஊசி போட்டிருக்கிறார்களா?"

"இல்லை. ஏடிசி போட்டிருக்கிறார்கள்".

"நாய் நல்ல நாயா, இல்லை ஏதாவது பிரச்சினையானதா?"

"என்ன நீங்க , நாய் கடித்தது எனக்குத்தான், ஆனால்நீங்க எண்ணைப் பற்றி விசாரிக்காமல் நாயைப் பற்றி இவ்வளவு அக்கறையாய் விசாரிக்கிறீர்கள்?" என்று என்னைக் கேட்டான். பொதுவாக இப்படி எல்லாம் வினாக்கள் எழுவதுதான் இயல்பு.

நாய்க் கடி ஆபத்த்தானதா?

நிஜம்மாவே ஒரு நாய்க் கடி என்றால், முதலில் நமக்குத் தெரியவேண்டிய தகவல், அது நல்ல நாயா? வெறிபிடித்ததா என்பதுதான். வெறிபிடித்த நாய் என்றால் பயந்தடித்துக் கொண்டு சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். சமயத்தில் அந்த நாய்க்கு வெறிநோய் இருப்பது கூட நமக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் அந்த நாய்க்கு வெறிநோய் ஊசி போட்டிருந்தால் நாம் தப்பித்தோம், இல்லை எனில் பிரச்சினைதான்.ஆனால் எப்படியானாலும், நாய்க் கடித்த உடனே. அந்த இடத்தை நன்கு கழுவி உடனே மருத்துவ சிகிச்சை செய்ய் வேண்டும்.உடனடி சரியான சிகிச்சை உயிரைக் கட்டாயம் காப்பாற்றும். நாயில் குட்டி நாய், பெரிய நாய் என்றில்லை, எந்த நாய் கடித்தாலும் பாதிப்பு ஒன்றுதான், ஆனால் எந்த இடத்தில் கடித்தது என்பதைப் பொறுத்து அதன் பாதிப்பும், நோய் வரும் காலமும் வேறுபடலாம். உங்களுக்கு ஒரு புண் இருந்து, அதில் வெறிநோய் உள்ள நாய் நக்கினால் கூட, அதன் எச்சில் பட்டால் கூட நமக்கும் வெறிநோய் வரும் என்பதே உண்மை. அதுதான் அறிவியல்..அது வேண்டாம் வெறிநோய் பாதிப்புள்ள நாய் லேசாக கீறினால் கூட, நமக்கு அப்படியே லபக்கென்று வெறிநோயின் வைரஸ் அப்படியே நம்மிடம் ஒட்டிக்கொள்ளும். வெறிநோயின் அறிகுறிகள் நம்மிடம் உண்டாகிவிட்டால் நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது நண்பா..! அது என்னப்பா அப்படி ஒரு ராட்சச வெறிநோய். என்கிறீர்களா?

வெறிநோயின் சுவாரசிய தகவல்கள்..!

வெறி நோயா? அது என்னப்பா? புதுவித நோய் என்கிறீர்க்ளா? வெறி பிடித்த நாயின் கடி/எச்சில் மூலம் வருவதுதான் வெறிநோய்(Rabies). வெறிநோய் வைரசின் பெயர் லைஸா வைரஸ் ( Lyssavirus )என்பதாகும். குட்டியூண்டு சைஸ் உள்ள இந்த வைரஸ்தான் வெறிநோயை உண்டுபண்ணுகிறது.ரேபிஸ்(Rabies) என்பது ஒரு லத்தீன் வார்த்தை. இதன் பொருள், பைத்தியம் பிடித்த/சித்த சுவாதீனமற்ற(Rabies=Madness) என்பதாகும். இந்த வியாதியினால், மூளை வீங்கிவிடும். வெறி நோயினால், அள்வுக்கதிகமான மூளை வீக்கம் (encephalitis ) ஏற்படும்.பின்னர் மூளையின் செயல்பாடுகளை மாற்றியமைத்து கண்டமேனிக்கு வைரஸின் போக்கில் செயல்பட வைக்கும். நமது இயல்பு நிலை பறி போய்விடும்.நம்மை இவ்வளவு பாடுபடுத்தும் இந்த வைரஸ் அப்படி என்ன யானை பெரிதா என்றால் இல்லவே இல்லை.ஒரு எறும்பு அளவு என்ன, ஒரு மண் துகள் அளவு கூட இல்லை.மிக மிகச் சிறியது. அதன் நீளம் 180 நானோ மீட்டர். அகலம் 75 நானோமீட்டர். ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரில், 100 கோடியில் ஒரு பகுதி..(One nanometre is one billionth of metre (1/1000000000 of a metre, or 0.000000001 m). இந்த லைஸா வைரஸ் ஒற்றை RNA வில், குழந்தையைத் துணியில் சுற்றுவதுபோல் சுற்றி கட்டி வைக்கப் பட்டுள்ளது. என்னப்பா ஏதாவது இந்த சைஸை/இந்த குட்டியூண்டு அளவைக் கற்பனை செய்ய முடிகிறதா? ஹும் ..முடியவே முடியாது நண்பா.ஆனால் ஹீலியம் அணுவின் விட்டம் ஒரு நானோ மீட்டர் .

மனிதர்/பாலூட்டியை குறி வைக்கும் வெறிநோய்..!

வெறிநோய் வெப்ப ரத்த விலங்குகளிடம் மட்டுமே-அதாவது பாலூட்டிகளிடம் மட்டுமே - வருகிறது.அதுவும் விலங்குண்ணிகளிடம் மட்டுமே! நகங்கள் உடைய விலங்குகளிடம் மட்டுமே வரும். ஆனால் அது அங்கிருந்து வாய்ப்பு கிடைக்கும் போது, மனிதனிடம் ஒரே பாய்ச்சலாக பாய்ந்து வந்துவிடுகிறது. அது மட்டுமல்ல, இந்த வியாதி ஒரு விலங்கிடமிருந்து இன்னொரு விலங்குக்கும் பரவுகிறது. பொதுவாக இந்த வெறிநோய், வெறிநோய் பாதிப்புள்ள ஒரு விலங்கிலிருந்து (அது நாயாக இருக்கலாம், பூனையாக இருக்கலாம், ஆடாக இருக்கலாம், மாடாகவும் இருக்கலாம்) இன்னொரு விலங்கை/மனிதரைக் கடிப்பதன் மூலமே வருகிறது..ஆனால் அமெரிக்காவில் வௌவால் & பூனைகள் மூலம் வருகிறது. பொதுவாக் இந்நோய் நரி, ராகூன்(raccoons,), ஷங்க்(skunks,), ஓநாய் மற்றும் கீரிகளிடம் காணப்படுகிறது.

வெறிநோய் என்றால் என்ன?

ஒருவருக்கு நாய் கடித்து சில தினங்களுக்குள், அவருக்கு வெறிநோயின் அறிகுறிகளான உடல் காய்ச்சல், உடல் வலி, உடல் மரத்துப் போதல், வாயில் எப்போதும் எச்சில் ஒழுகுதல், எரிச்சல், மனநிலைக் கோளாறு, உணவை விழுங்க முடியாமை, நீரைக் கண்டால் கோபம், வெறுப்பு, மூச்சுவிட முடியாமை, உடல் இறுக்கம் (show signs and symptoms of rabies such as headache, fever, anxiety, confusion, excessive salivation, difficulty swallowing, hydrophobia or fear of water, hallucinations, insomnia, partial paralysis etc; the disease may be in its fatal form) போன்றவை வெறி நோய் வந்ததின் முக்கியமான அறிகுறிகள்.

நாய்க்கடிக்கு சிகிச்சை எப்படி?

பொதுவாக மனிதனுக்கு ஏற்படும் வெறிநோய் என்பது அதன் தீவிரமான அறிகுறிகள் ஏற்படும் முன், கடித்த உடனேயே அதற்கான நோய்த்தடுப்பு முறைகளை 48 மணி நேரத்துக்குள் தரவேண்டும். அப்படி நோய்த்தடுப்பு மருந்து தக்க தருணத்தில், வெறிநாய் கடித்தவுடன்/ நாய் கடித்தவுடன் கொடுத்துவிட்டால் கட்டாயம் வெறிநோயிலிருந்து தப்பித்துவிடலாம். ஆனால் உடனடி சிகிச்சை தராவிட்டால் அது உயிர் குடிக்கும் எமனாகவே மாறிவிடுகிறது.வெறி நோய்க்கான வைரஸ் மைய நரம்பு மண்டலத்தையும், முடிவில் மூளையையும் தாக்கி, இறப்பு ஏற்படபாதை போட்டுத் தருகிறது.

முற்றிய வெறிநோய் !

வாயில் நுரை தள்ளிக்கொண்டிருக்கும் வெறிநோய் முற்றிய வெறிநாயாக இருந்தாலும் கூட, கடித்த 48 மணி நேரத்திற்குள் அதற்கான தடுப்பு மருந்தைப் போட்டு விட்டால் வெறிநோயிலிருந்து நாய் கடித்த நபரைக் காப்பாற்றிவிட முடியும். ஆனால் வெறிநோயின்வைரஸ்கள் நமது நரம்பைத் தொட்டுவிட்டாலோ/வெறிநோயின் வெளிப்பாட்டு அறிகுறிகள் உண்டாகிவிட்டாலோ, உங்களை எந்த கொம்பனாலும் காப்பாற்ற முடியாது. நிலைமை ரொம்ப மோசமாகி, கெட்டுப் போய், இறுதியில் சாவு ஒன்றுதான்.. ஒரே முடிவாக இருக்கும்.

நம்மிடையே நிலவும் மோசமான மூடநம்பிக்கைகள்..!

நம் மக்களுக்கு வெறிநோய் பற்றிய தகவல் எதுவும் தெரியாமலேயே அவர்கள் மனம் போனபடி நாய்க்கடிக்கு மருத்துவம்/மாந்திரீகம்/ நாட்டு மருந்து சிகிச்சை என செய்து கடி பட்டவர்களின் உயிரைப் பணயம் வைத்து பலி கொடுக்கின்றனர். கிராமங்களில் மட்டுமல்ல, நகரங்களிலும்கூட வெறிநாய்க்கடி பற்றிய விழிப்புணர்வு இல்லாததுதான் வேதனை. படித்தவர்கள் கூட மூடநம்பிக்கையான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்கின்றனர். நாய்க் கடித்தவுடன் அதனை சிலர் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். சிலர் உடனேயே நல்லெண்ணெய் முட்டை கொடுத்துவிட்டு மந்திரிப்பவர் அழைத்துச் சென்று மந்திரிப்பார்கள். அவர் என்ன சொல்கிறாரே அதனை மட்டும் வேத வாக்காகக் கேட்பார்கள். அவர் நல்லெண்ணெயில் ஏதோ ஒரு பச்சிலையை பிழிந்து கொடுப்பார்.பின்னர் 6 மாதத்துக்கு கோழிக்கறி, பூசணிக்காய் மற்றும் அகத்திக்கீரை சாப்பிடாமல் பத்தியமாக இருந்தால் வெறிநாய்க்கடி சரியாகி விடுமாம். கடித்த உடன் நல்லெண்ணெய், முட்டை கொடுப்பது விஷம் ஏறாமல் தடுப்பதிற்காம். சிலர் நாய்க்கடித்ததும், ஏதோ ஒரு மரத்தைக் கடிக்கச் செய்து, அப்படிச் செய்ததும் நாய்க்கடித்த இடத்திலிருந்து பச்சையாக ஏதோ வழியுமாம். நாய்க்கடியின் விஷம் இறங்கிவிடுமாம். இப்படி ஊருக்கு ஊர் வித்தியாசமான சிகிச்சைகள் உண்டு. ஆனால், கடித்த நாய் வெறிநாயாக இல்லாமல் சாதா நாயாக இருந்தால் பிழைத்துக் கொள்வார்கள். வெறிநாய் என்றால்.. அவ்வளவுதான்..பரலோகம் பயணிக்க வேண்டியதுதான்.

வெறிநோயின் பயணப்பாதை..!

வெறிநோய் பற்றிய தகவலே நம் வயிற்றில் புளியைக் கரைத்துவிடும். ஆனால் அது பயம் தரும் விஷயம் என்பதற்காக நாம் தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியுமா? நமது உயிரைக் காப்பாற்ற வேண்டுமே?. வெறிபிடித்த நாய்க்கடி மூலம் நமக்குள் நுழைந்த வைரஸ், அது எந்த இடத்தில் நுழைந்ததோ அதைப் பொறுத்து, அது உடலுக்குள் வேகமாக நரம்பு மண்டலம் வழியே ஜாலியாகப் பயணம் செய்கிறது .பின்னர் இறுதியாக மூளைக்குள் போய் ஜம் என்று உட்கார்ந்துவிடுகிறது.பின்னர் அது ஆடும் ஆட்டம் இருக்கிறதே.. அது சொல்லி மாளாது.

வைரஸின் அதி வேக செயல்பாடு!

மனித உடம்பில் எந்த இடத்தில் நாய்க் கடித்தது என்பதைப் பொறுத்தே, அந்த வைரஸ் எத்தனை நாளில் மத்திய நரம்பு மண்டலத்தைப் போய் சரணந்து, நம் மூளையைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, வைரஸ் நம் உடலை ஆட்சி செய்யத் துவங்கும் என்பது தெரியும். அதனை ஒட்டியே இதன் அடைகாப்புக் காலம்(Incubation period) சில மாதங்களிலிருந்து ஓராண்டு வரை இருக்கலாம். ஒரு முறை இந்த வெறிநோய் வைரஸ் மைய நரம்பு மண்டலத்திற்குள் காலடி எடுத்து வைத்துவிட்டால், அவ்வளவுதான்.. ! அவங்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான். தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிடும். வெறிநோயின் அறிகுறிகள் உருவாகத் துவங்கும். அதன்பின் ஓரிரு நாட்களுக்குள் அதன் பிரச்சினைகளும் சிக்கல்களும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, மிகக் குறைந்த நாட்களிலேயே,அதாவது ஓரிரு நாட்களிலேயே இறப்பு நிகழ்ந்து விடும்.

நோயின் அறிகுறிகள்..!

துவக்க காலத்தில் முதலில் உடல்வலி, பின் தலைவலி அதன்பின் காய்ச்சல் என்று கொஞ்சம் கொஞ்சமாக நோய் முற்றும். பின் பொறுக்க முடியாத வலி உண்டாகும். கட்டுகடங்காத உடல் பிரச்சினை, மன அழுத்தம், நீரைக் கண்டால் பயமும் வெறியும் ஏற்படும்.உணவு விழுங்க முடியாது. ஆனால் நீர் வேண்டும் வேண்டும் என்று கத்துவார்கள். அவர்களுக்கு மனப்பிரமை ஏற்படும். ஏராளமாய் பிதற்றுவார்கள். வாயில் எச்சில் அதிகமாக ஊற்றெடுக்கும்;ஒழுகும். மற்றவரை கண்டால் நாய் போலவே குரைப்பார்கள், ஓடிவந்து கடிக்க வருவார்கள். உடல் செயல்பாடுகள் வித்தியாசமாக இருக்கும். உடல் உறுப்புகள் சில செயலற்று போய்விடும். பின் உடல் அசையாமை, சித்தம் மாறிய நிலை போன்றவை ஏற்படும். முடிவில் கோமா நிலையாகும். உயிர்ப் பிரிதல் சுவாசிக்க முடியாமையால் நேரிடும்.

வெறிநோய் உருவாக்கும் லைசாவின் தந்திரங்கள்..!

வெறிநோய் வைரசான லைசாவில் உள்ள பிரச்சினை என்னவென்றால்,இந்த வைரசை மனித தற்காப்புத் திறன்/தடைகாப்பு அணியின் வீரர்களின்.. அதாம்பா.. நம்ம உடலில் படைவீரர்களான இரத்த வெள்ளையணுக்களின் ஒரு பிரிவான லிம்போசைட்டுகளிடம் (Lymphocytes) லைஸா வைரஸ் பெப்பே காண்பித்து நம் உடலுக்குள் நுழைந்துவிடும். பின் அதன் பார்வையிலிருந்து தப்பி மறைந்து வாழும் திறன் உள்ளது இந்த லைஸா வைரஸ். அதனால், இந்த வைரஸ் உடலுக்குள் நுழைந்தாலும், அதனைக் கண்டுபிடிக்க முடியாததால், உடலுக்குள் நுழைந்த வைரசுடன், போர்வீரர் வெள்ளையணுக்கள் போரிட முடியாது. எனவே, எந்த தற்காப்பு நடவடிக்கையும் நம் உடலால் எடுக்கப்பட மாட்டாது.உடலுக்குள் லைஸா கொலை வெறியுடன் ஜாலியாய் சுற்றி வரும் இந்த வெறிநோய் லைஸா வைரஸ் நம் உடம்பில் அது நுழைந்த சில நாட்கள்/வாரங்களுக்குள் (நுழையும் இடத்தைப் பொறுத்து, கால் என்றால் சில மாதங்கள், வயிறு என்றால் சில வாரங்கள் வாய்/கன்னம்/நெற்றி என்றால் 10 நாட்களில் ) வெறிநோயின் அடையாளங்களை/அறிகுறிகளை, உடலில் பதிவு செய்யும்.சில சமயம் இந்த வைரசின் அடைகாக்கும் திறன் 7 ஆண்டுகள் கூட நீடிப்பதுண்டு.

லைஸா வைரசின்.. தடுப்பூசி கண்டுபிடிப்பு ..!

லைஸா வைரஸ் எந்த மூலக்கூறு செயல்பாட்டில் (Molicular mechanism ) ஏறிப் பயணம் செய்து தாவிப் பரவுகிறது என்ற தகவல் இதுவரை அறியப்படவில்லை. ஆனால் ஒரு முறை வெறிநோய் அறிகுறிகள் வெளிப்படையாய் தெரிய ஆரம்பித்து விட்டால் போதும். நம்மை இந்த உலகில் எந்த மருத்துவராலும், எந்த சக்தியாலும் எந்த வகையிலும் காப்பாற்றவே முடியாது. இந்த வைரஸ் செல்லுக்குள் தனியான வைரஸ் தொழிற்சாலை(Virus factory) உண்டாக்கி, அதில் தன் பெருக்கத்தைச் செய்யும். அதன் பெயர் நைக்ரி துண்டுகள் (Naigri bodies). இதனைக் கண்டுபிடித்தவர் மேற்கிந்தியத் தீவைச் சேர்ந்த டாக்டர். ஜோசப் லேன்னோக்ஸ் பாவன் என்ற ஒரு பாக்டீரியலாளர்.. (Dr. Joseph Lennox Pawan of Trinidad in the West Indies, a Government Bacteriologist ).இந்த நைகரி உடலை இவர் 1931 ல் வௌவால்களின் மூளையிலிருந்து கண்டறிந்தார்.

லைஸா வைரசின் மோதல்/போர் உடலுக்குள்..!

இந்த வைரஸ் நம் உடலின் இண்டர்பெரானுடன் (interferon) முட்டி மோதி சண்டையிட்டு அதனை தோல்வியுறச் செய்கிறது. உடலின் தற்காப்புத் திறனைக் காலி செய்கிறது. மூளையின் பலவித நடவடிக்கைகளை முடக்குகிறது. அங்கிருந்து உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவுகிறது. பின் நமது உமிழ் நீர் சுரப்பிக்கும் தாவுகிறது. ஏராளமான உமிழ் நீர் கட்டுக்கடங்காமல் சுரக்கிறது. அந்த உமிழ்நீரில் எக்கச் சக்க வைரஸ் இருக்கும். அத்துடன் வாய் மற்றும் கன்னத்திலும் வைரஸ் கோடிக்கணக்கில் வழியும். எனவே நாய் கடித்து 2 நாளிலிருந்து-5 ஆண்டுகள் வரையிலும் வெளியிலேயே தெரியாமல் அடைக்காத்து, இது உடலில் தங்கி, பின்னர் அறிகுறி உண்டாகி முடிவில் இறப்பு ஏற்படலாம். பெரும்பாலான பாதிப்புக்குள்ளான பாலூட்டிகள் கடித்த ஒரு சில வாரங்களிலியே உலகை விட்டு சென்றுவிடும். ஆனால் ஆப்பிரிக்க கீரி மட்டும்,இந்த உடல் உபாதைகளோடேயே பல ஆண்டுகள் வாழ்கின்றன.

வைரசின்.. வாழ்க்கை முறை..!

வைரசின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், வைரஸ் பெருக்கம் செய்ய/உயிர் வாழ கட்டாயமாய் இன்னொரு செல்/உயிர் வேண்டும். வைரஸ் தானே தனியாய் தனித்தியங்கி சுதந்திரமாய் வாழ இயலாது. இன்னொரு செல்/உயிர் கிடைக்கும் வரை வைரஸ் சிவனே என்று காத்துக்கிடக்கும். எப்படா ஒரு இளிச்சவாய் உயிர் தன்னைச் சுமக்க கிடைக்கும் என்று. அந்த காத்திருத்தல் காலம், சில சமயம் 2 ஆண்டுகள்/200 ஆண்டுகள்/2000 ஆண்டுகள் கூட ஆகலாம். அதற்குப்பின்னும் கூட! ஆனால் ஓர் உயிர் மட்டும் கிடைத்துவிட்டால் வைரஸ் டபக்கென்று உயிர்த்தெழுந்து தன் இனத்தை விருத்தி செய்யும்.

உலக நாடுகளில் வெறிநோய் நிலைமை..!

உலகம் முழுவதும் 97% வெறிநோய், நாய்க்கடியிலிருந்துதான் உருவாகிறது. நாய்க்கு வெறிநோய் தடுப்பூசி போடுவதன் மூலம் இந்நோய் வராமல் தடுக்கலாம். நமக்கு வெறிநோய் தடுப்பு ஊசி போடுவதன் மூலம் நம்மைவெறிநாய்க்கடியிளிருந்து 3 ஆண்டுகள் தப்பிக்கலாம். அமெரிக்காவில் விலங்குகள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பூசி மூலம் வீட்டு நாய்களுக்கு வெறிநோய் வருவது கட்டுபடுத்தப் பட்டிருக்கிறது.ஆனாலும் கூட அமெரிக்காவில் வௌவால், பூனை மற்றும் ராகூன் மூலம் வெறிநோய் வருகிறது. ஆஸ்திரேலியா, ஜப்பான்,ஐரோப்பிய நாடுகள் போன்ற நாடுகளில் வெறிநோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. இந்த நோய் வௌவால் மூலம் காற்றின் வழியே பரவுகிறதாம்.

வெறிநோய் இறப்பின் தகவல்கள்..!

வெறிநோய் இன்று சுமார் 150 நாடுகளுக்கு மேல் காணப்படுகிறது. உலகம் முழுவதும் வெறிநாய் வாழும் இடங்களில்/வெறிநோய் வரும் வாய்ப்புள்ள இடங்களில் சுமார், 330 கோடி மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் ஆண்டுதோறும் 55,000௦௦௦ மனித உயிர்களைப் பலி வாங்குகிறது வெறிநோய். இந்த இறப்புகளில் 90% ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில்தான் நிகழ்கிறது. இந்தியாவில் மட்டும் ஒரு வருடத்தில் 20,000 பேர் வெறிநோயினால் இறக்கின்றனர். இது உலகில் ஏற்படும் வெறிநோய் சாவுகளில் 36% ஆகும். இறப்பு நிகழ்வில் 40%,வெறிநோய் இறப்புக்கள் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கே ஏற்படுகிறது. இவர்களும், கடித்த நாய், வெறிநோய் வந்த நாய் என்று தெரியாமலே கடிபட்டு, பாதிக்கப்பட்டு இறக்கின்றனர்.ஒரு விஷயம் என்னவென்றால் இந்த வெறிநோய் சனியன் வியாதி முற்றும் வரை வெளியே தெரியாமல் கமுக்கமாய், அடக்கமாய் உடலுக்குள்ளேயே இருக்கும். வெறி முற்றிய பின்தான் அதன் அறிகுறிகள் வெளியே வெளிப்படும். பின் அம்புட்டுதான்.. ! ஐயகோ.. நம் உயிர் ஓரிரு நாட்களுக்குள் முடிந்துவிடும்.

வெறி நோயிலிருந்து காப்பாற்றப்படும் மனித உயிர்கள்..!

மனிதனை வெறிநோயிலிருந்து காப்பாற்ற எதுவுமே இல்லையா ? நாம் என்ன செய்ய என்று பயந்து தடுமாற வேண்டாம் . நாய்க் கடித்த சில மணி நேரங்களிலேயே,காயத்தைத் துடைத்து, அதன் பின் உடனேயே, தற்காப்பு ஊசியான செயற்கை தடுப்பு மருந்து கொடுத்து, முறையான தடுப்பு நடவடிக்கைகள் செய்தால் நாம் உயிர் காப்பாற்றப் பாடலாலாம்.ஒவ்வொரு ஆண்டும், உலகில் சுமார் 1 1/2 கோடிப்பேர், நாய்க்கடிக்கான தடுப்பு நடவடிக்கைகள் எடுத்துக் கொள்கின்றனர். இதன் மூலம் 32,700 இறப்புக்கள் தடுக்கப்படுகின்றன. இந்தியாவில் பெரும்பாலும் தெரு நாய்கள் மூலமும், சில சமயம் வளர்ப்பு நாய்கள் மூலமும் வெறிநோய் உண்டாகிறது.

வெறிநோயின் ஆதிகால சரித்திரம்...!

வெறிநோய் பற்றிய தகவல் சுமார் 5,500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்ததாக பதிவுகள் சொல்கின்றன.கிரேக்கர்கள், ரோமானியர்கள் மற்றும் பாபிலோனியர்கள் வெறிநோய் பற்றிய ப்துவுகளை களிமண் பலகைகளில் பதிவு செய்து வைத்துள்ளனர்.மனிதன் எப்போது நாய் வளர்க்கத் தொடங்கினானோ அப்போதே, வெறிநோய் பாதிப்பும் ஏற்பட்டிருக்க வேண்டும் எனத் தவகல்கள் சொல்லுகின்றன. மனிதன் நாயுடந்தான் முதல் பழக்கம் ஏற்பட்டிருந்தது. அதன் ஆதாரமாக, இஸ்ரேலில் ஒரு பெண்ணின் உடலுடன் ஒரு நாயும் சேர்த்து அடக்கம் செய்யப்பட்ட மம்மி கிடைத்துள்ளது இதன் வயது சுமார் 12,000 வருடங்கள். ஆனாலும் கி.மு 1930 களில் எஷ்னுன்னாவின் கோடக்சில்(Codex of Eshnunna)தான் வெறிநோய் பற்றி எழுதி வைக்கப்பட்டுள்ளது. அதாவது கியூநிபாரம் எழுத்துக்களில் pathividapபட்டுள்ளது. அதில் நாயின் சொந்தக்காரருக்கு எப்படி வெறிநோய் அறிகுறிகள் உருவாயின என்றும், அதற்கான தடுப்பு முறைகளும் கூட கூறப்பட்டுள்ளன.அதன் பின்னர் கி.மு 800-700௦௦ களில் ஹோமர் பாதிப்பு வந்த நாய் பற்றி எழுதி உள்ளார்.கி.மு 420 களில் கிரேக்க தத்துவஞானியும் வீட்டு விலங்குகளில் வெறிநோய் வந்தது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். கி.மு. 400 ல் வாழ்ந்த, அரிஸ்ட்டாட்டில் நாய்கள் நோயினால பைத்தியம் பிடித்து திரிந்ததாகவும், அவை எரிச்சலோடு மற்ற விலங்குகளை கடித்ததாகவும் எழுதியுள்ளார்.

வெறிநோய்த் தடுப்பு மருந்தும்.. உயிர் காத்தலும்..!

பொதுவாக மனித வெறிநோய் இறப்பு என்பது 1885 ல் இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை தொடர்ந்து கொண்டே இருந்தது. இதன் தடுப்பு மருந்தை/ செயற்கை எதிர் உயிரியை 1885 ல் லூயிஸ் பாஸ்டர்

(Louis Pasteur ) & எமைலி ரௌக்ஸ் (Émile Roux) என்ற இரு விஞ்ஞானிகளும் இணைந்து வெறிநோய்க்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்தனர். இவர்கள், ஏற்கனவே, வெறிநோய் வந்து இறந்த ஒரு முயலின் மூளையிலிருந்து செல்களை எடுத்து, அதிலிருந்தே இந்த தடுப்பு மருந்தை தயாரித்தனர்.இந்த வகையில் செத்துப்போன வைரஸிலிருந்து தயாரிக்கும் மருந்துதான், புதிய வகையில் நவீனமாய் வளர்த்து தயாரிக்கும் மருந்தைவிட மலிவாக இருக்கிறது.

வெறிநாய்க்கடியும்.. அதன் சிகிச்சை ஊசிகளும்..!

நண்பர்களே. முன்பெல்லாம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் வெறிநாய் கடித்தால் 23 ஊசிகள் போடப்படும். அதன் பின், 25 ஆண்டுகளுக்கு முன் நாய் கடிக்கு தொப்புளைச் சுற்றி 14 ஊசிகள் போடுவார்கள். அந்த ஊசியின் வலி பிராணன் போய்விடும். பின்னர் 10 ஆண்டுகளுக்கு முன் 7 ஊசிகள் போட்டனர். இப்போது 3 ஊசிகள் மட்டும்தான். வலியும் அவ்வளவாக இருப்பதில்லை. முதல் 2 ஊசி ஒரு வார இடைவெளியிலும், கடைசி ஊசி 3 வாரத்துக்குப் பின்னும் போடுவார்கள்.வெறிநோய்த்தடுப்பு ஊசி சுமார் 3 வருடங்களுக்கு வெறிநோயிலிருந்து பாதுகாப்புத் தரும்.

நாய்க்கடியின் பழைய அனுபவங்கள்..!

எனக்குத் தெரிந்து சுமார் 10 பேர்களுக்கு மேல் வெறிநோயால் இறந்திருக்கின்றனர். இவர்களில் சிலர் குழந்தைகள். சிலர் வீட்டில் வளர்த்த நாய் நக்கி, அதன் மூலம் வெறிநோய் வந்து, நாய் போல கத்தி பிராண்டி, எச்சில் வடிந்து, குலைத்து, தன் உணர்வு இழந்து கொடுமையான சித்திரவதைகள் அனுபவித்து இறந்திருக்கின்றனர். பச்சை முத்து என்று ஒரு நண்பர். கல்லூரியில் ஆய்வக பொறுப்பாளர் பணி. அவரது வீட்டில் வளர்த்த ஒரு மாத நாய்க்குட்டி அவர் கையில் இருந்த சின்ன காயத்தில் நக்கி இருக்கிறது. நண்பர் அதனை மறந்து விட்டார். ஆனால் சரியாக 6 மாதம் கழித்து பச்சை முத்து வெறிநோய் வந்து அதன் அனைத்து பாதிப்புகளும் ஏற்பட்டு ரொம்பவும் மோசமான நிலையில் உயிர்விட்டார். கிராமத்தில் ஒரு இளவயது நண்பருக்கு நாய் கடித்துவிட்டது, இரண்டு நாளில் அவர் இறந்து விட்டார். அவரின் துணைவிக்கும் வெறிநோய் ஒட்டியது தான் வேதனை. ஒரு வீட்டில் ஒரு பெண்குழந்தைக்கு நாய்கடித்து வெறிநோய் வந்துவிட்டது. குழந்தை என்பதால் மனம் கேட்காமல் அப்பா தூக்கப் போக, முடிவில் அப்பாவும் வெறிநோய் வந்தே செத்துப்போனார். வெறிநோய் வந்த எல்லோருமே பொதுவாக ஒரே மாதிரியான அறிகுறிகளுடன்தான் இறந்திருக்கின்றனர்.பார்க்க பாவமாய் இருக்கும். ஆனால் இதிலுள்ள வேதனை என்னவென்றால், வெறிநோய் பிடித்தவர்களுக்கு யாரும் போய் உதவ முடியாது. மற்றவர்கள் அவர்களிடம் நெருங்கினால் வெறிநோய் வந்தவர்கள் அடுத்தவர்களை கடித்து வைத்து விடுவார்கள்.அவர்களிடமிருந்து வெறிநோய் தொற்றும். எனவே, வெறிநோய் பிடித்தவர்கள் இறந்ததும் யாரும் தொடாமல் எடுத்துச் சென்று எரித்து விடுவார்கள்.

வெறிநோய்க்கான சிகிச்சை எப்படி?

ஒருவருக்கு நெசம்மாவே வெறிநாய் ஒன்று கடித்திருந்தால்,அவருக்கு எந்த இடத்தில் நாய் கடித்ததோ,அந்த இடத்தை நன்கு கழுவி, மருந்து போட்டுப் பின் தடுப்பூசிகளை போடவேண்டும்.ஊசியை தோள்பட்டையின் டெல்டாய்டு சதையில்(deltoid muscle) தான் போடுவார்கள். பின் ஒரு சில மணித் துளிகளுக்குள் தற்காப்புத் திறனுள்ள வெறிநோய் எதிர்ப்பானாகிய இம்முயூனோ குளோபுலின் (immune globulin ) போடவேண்டும். பின் அதற்கு 4-5 தடுப்பூசியும் கடிபட்ட இடத்திற்கருகிலேயே போடவேண்டும். நமக்கு முன்பே வெறிநோய் தடுப்பூசி போட்டிருந்தால், நாய் கடித்த பின் இம்முயூனோ குளோபுலின் போட வேண்டாம்.4 தடுப்பூசி மட்டும் போதும். வெறிநோய் வராமல் இருக்க அதற்கான தடுப்பூசியும் முன்னமேயே போடலாம். வெறிநாயின் வெறிநோய்க்கடியை உடனடியாக கவனித்து அதற்கான சிகிச்சை செய்தால் காப்பாற்றிவிடமுடியும்.

வெறிநோய் உற்பத்திக்கூடம். மூடுவிழா..!

இம்முயூனோகுளோபுலின் (Immunoglobulin) எனற தடுப்பு மருந்து உடல் செல்களுக்குள் வெறிநோய் வைரஸ் நுழையவிடாமல் தடுக்கிறது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் வரை, நீலகிரி மாவட்டத்தின் குன்னோரில் உள்ள பாஸ்டர் நிறுவனம், இந்தியா முழுமைக்கும் வெறிநோய் மருந்து தயாரித்துக் கொடுத்துக்கொண்டிருந்தது. ஆனால் புண்ணியவான், சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ், பெரிய மனது பண்ணி,இந்த நிறுவனத்துக்கு பால் ஊற்றி மூடுவிழா பணியினை மிகுந்த மக்கள் நல நிகழ்வாக நடத்திவிட்டார். அதன் பின் வெறிநோய் தடுப்பூசி பாவப்பட்ட மக்களால் வாங்கமுடியாத அளவுக்கு விலை வானத்தில் பறந்து உயர்ந்துவிட்டது. மக்கள் அரசு மருத்துவமனையையே நம்ப வேண்டி இருக்கிறது. தனியார் மருந்துக்கடைகளில் இதன் விலை ரூ.2,500 /= க்கு மேல். இதனை எப்படி ஓர் உழைப்பாளி/ஏழைத் தொழிலாளி வாங்க முடியும்.? .இப்போது தடுப்பூசியின் எண்ணிக்கையும், அதன் வலியும் கூட குறைந்துள்ளது.

உலக வெறிநோய் தினம்..!

செப்டம்பர் 28 என்பது உலக வெறிநோய் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.அன்று நாய்களுக்கும், மனிதர்களுக்கும் தடுப்பூசி போடப் படுகிறது. வெறிநோய் பாதுகாப்பு நடவடிக்களை கடைப் பிடிக்க மக்களிடம் ஒரு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதுவரை உலகில் நிகழ்ந்துள்ள பதிவுகளில், 2005 ம் ஆண்டு விஸ்கான்சன் (Wisconsin) நகரில் ஜென்னா கீஸ் (Jeanna Giese)ஒரு இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த வெறிநோய்தான் குறிப்பிடத்தகுந்தது. வெறிநோய் வந்த துவக்கத்தில் அவரை மருந்த்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது எதிர் உயிரின் தற்காப்பு முறை நன்கு செயல்பட்டு வைரசுடன்போராடி வெற்றி கண்டார்.இன்றும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதன் பின் இரண்டு நோயாளிகள், கொலம்பியாவில், 2008 ல் 11 வயதுப் பையனும், கலிபோர்னியாவில், 2011, ஜூலையில் 8 வயது சிறுமியும் மட்டும் அதிசயமாக வெறிநோய் வந்த பின்னரும் பிழைத்திருக்கின்றனர் . வேறு நபர்கள் வெறிநோய் வந்து பிழைத்ததாக சரித்திரமே இல்லை.

உலகின் சில வெறிநோய் நிகழ்வுகள்..!

வெறிநோய் பற்றிய சில உண்மை நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்ளலாமா?இவை அனைத்தும் வெளிநாடுகளின் நிகழ்ந்தவை. பெயர்கள் மட்டும் மாற்றப்பட்டிருக்கின்றன. 2006 ம் ஆண்டு. பிரவரி மாதம் முதல் தேதி. குப்பனின் 9 மாத நாய், காலை, தெருவில் வருவோர், போவோர்களை எல்லாம், துரத்திக் கடித்தது. பின்னர் அடுத்த வீட்டு நாயையும் கடித்துவிட்டு ஓடியே போய்விட்டது. கடி வாங்கிய நாய்க்கு மார்ச் முதல் தேதி வெறிநோய் உண்டாகி, மார்ச் 3 ம் நாள் நாய் இறந்துவிட்டது..ஆனால், பிப்ரவரி முதல் நாள் மாலை 5 மணிக்கு பள்ளியிலிருந்து திரும்பி வீட்டுக்கு வந்துகொண்டிருந்த 7 வயதுப் பையனைக் கடித்தது. நாயின் சொந்தக்காரரிடம் சென்று நாய்க்கடி பட்ட குழந்தைகளின் பெற்றோகள் கேட்டதிற்கு அவர் நாய்க்கு வெறிநோய்த் தடுப்பு ஊசி போட்டுள்ளதாக கூறிவிட்டார். ஆனால் பின்னர் அதே நாய் இறந்துவிட்டதும் விசாரித்தால் வேறு ஏதோ ஒரு நாய்க்குப் போட்டதாய் சொன்னதை இவர் நாய்க்கு என்று எண்ணிவிட்டாராம். வேறு ஒரு இடத்திலும் இதோ போல நாய்க்கடி. சொந்தக்காரர் தடுப்பூசி போட்டதாகச் சொல்லிவிட்டார். நாயும் இறந்துவிட்டது. கடிபட்ட குழந்தைகளும் பலியாகிவிட்டனர். விஷயம் கேட்டால், அந்த நாய்க்கு போட்டது போலி மருந்தாம். இது எப்படி இருக்கிறது.? நண்பர்களே..உஷார்.. உஷார்.. நாய்க்கடி உஷார்..!

உயிர் காக்கும் வெறிநோய் தடுப்பூசி ..!

வெறிநோய்க்காக போடும் தடுப்பூசி மூன்றாண்டு காலத்துக்கு பாதுகாப்பு தரும்.அதிகம் விலங்குகளிடம் பழகும் நபர்களும், அதிகம் விலங்குகள் வசிக்கும் இடத்தில் வாழும் மனிதர்களும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் சுமார் 1 .5 கோடி மக்கள் வெறிநோய்க் கடிக்குப்பின் அதற்கான மருந்தினை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் வருடந்தோறும் சுமார் 3,27,000௦௦௦ மனித உயிர்கள் காப்பாற்றப் பட்டு வருகின்றன. நாயின் வெறிநோய் ஆசிய ஆப்பிரிக்க மக்களில் 330 கோடி மக்களை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.

தடுப்பூசி கிடைக்காத பாவப்பட்ட மக்கள்..!

பொதுவாக கிராமப் பகுதியில் வாழும் மக்கள்தான் வெறிநோயினால் அதிகம் பாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் . ஏனெனில் இவர்களுக்குத்தான் விரைவில் வெறிநோய்க்கான மருந்து உடனடியாக கிடைப்பதில்லை.

வெறிநோய் பற்றிய ஆய்வு..!

சமீபத்திய வெறிநோய் பற்றிய கண்டுபிடிப்பு நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. உடலில் வெறிநோய் அடையாளங்கள் உருவான பின், நம் பெரும்பாலான உடல் செல்களில் உள்ள உட்கருவின் டி.என்.ஏ (DNA),ஆர்.என்.ஏ.( RNA) வாக மாற்றப்படுகிறது. ஆனால் இவ்வளாவு உருமாற்றம் நடந்தாலும், வெறிநோய் வைரஸ் பெருக்கம் செய்ய இந்த ஆர்.என்.ஏ வின் சிறு பகுதியே பயன்படுத்தப்படுகிறது. என்ன அநியாயம் பாருங்கள். வைரஸ் பல்கிப் பெருக, ஏராளமான புரதம் உருவாக்க, அளப்பறிய ஆர்.என்.ஏ உருவாகி, அதில் கொஞ்ஞூண்டு ஆர்.என்.ஏ மட்டுமே.. பயன்பாட்டுக்காம். இந்த பாழாய்ப் போன வெறிநோய் வைரஸ் தனக்கு வேண்டிய அளவில் மட்டும் டி.என்.ஏ வை உருமாற்றம் செய்ய வேண்டியதுதானே..!

வெறிநோய் வருவதற்கான சில காரணிகள்..!

ஆசிய நாடுகளில் சில இடங்களில் நாய்க்கறி உண்ணும் பழக்கமும் உள்ளது. இதுவும் கூட வெறிநோய் உருவாக ஒரு காரணம் என்று அறியப் படுகிறது.நம்மிடையே, இதுவரை, ஒருவருக்கு வெறிநோய் உள்ள நாய் கடித்ததா என்பதை அறிவதற்கான சோதனை இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. வெறிநோய் அறிகுறிகள் வந்த பின்தான் தெரிகிறது. பொதுவாக வெறிநோய் எச்சில் மூலமே பரவுகிறது.மிக அரிதாக வெறிநோய், பாதிக்கப்பட்ட வெறிநோய் உறுப்புகளிலிருந்து வெளியேறி காற்றில் கலந்து அப்படியே நாம் காற்றைச் சுவாசிக்கும்போது உள்ளே நுழைந்து வெறிநோயை உருவாக்குவதும் உண்டு. அதே போல அரிதாக சரியாக வேகவைக்கப்படாத வெறிநோய் வந்த விலங்குகளின் மாமிசத்திலிருந்தும் வர வாய்ப்பு உண்டு.

வெறிநோய் சிகிச்சையும்.. தடுப்பு நடவடிக்கையும்..! உலக நல நிறுவனத்தின் (WHO ) வின் அறிவுரைகள்:

அடுத்த கட்டுரையைப் படிக்கவும்..இதன் தொடர் அதில் வரும். நீளம் அதிகம் என்�¿

வெறிநோய் சிகிச்சையும்.. தடுப்பு நடவடிக்கையும்..!

by Mohana Somasundram on Wednesday, October 5, 2011 at 11:43pm ·

வெறிநோய் சிகிச்சையும்.. தடுப்பு நடவடிக்கையும்..! உலக நல நிறுவனத்தின் (WHO ) வின் அறிவுரைகள்:

பொதுவாக நாய் கடித்த உடனேயே சிகிச்சையைத் தொடங்கிவிட்டாலும், ஒரு சில நாட்களில் சிகிச்சையளித்தாலும் கூட வெறிநோயின் அறிகுறிகளிலிருந்தும், அது தொடர்பான சாவிலிருந்தும் தப்பிக்க வாய்ப்பு உண்டு. மேலும் நாய்க்கடித்த உடனேயே, அந்த காயத்தைக் கழுவி, நன்கு அதற்கும் சிகிச்சை அளித்து, வெறிநோய்க்கான இம்முயூனோகுளோபினையும் உடலுக்குள் செலுத்த வேண்டும். அத்துடன், உடனடியாக தடுப்பூசியும் போடவேண்டும் . சிலசமயம், கடிபட்ட இடத்தை இயற்பியல்/வேதியல் முறைகளால் கழுவுவதன் மூலம் அரிதாக

வெறி நோய் வைரஸை நீக்கிவிடவும் வாய்ப்பு உள்ளது. எனவேதான், கடிபட்ட இடத்தில் உடனடியாக அதாவது 15 நிமிடத்திற்குள் முக்கியமாக சிகிச்சை செய்ய அளிக்க வேண்டும். முதலில் காயம் பட்ட/ கடிபட்ட இடத்தை சுமார் 15 நிமிட நேரம் தொடர்ந்து சோப்புத் தண்ணீர்/சோப்புத்தூள்/ டிங்க்சர் அயொடின் (povidone iodine)/வெறிநோய் வைரஸைக் கொல்லும் பொருட்களால் அந்த இடத்தை தொடர்ந்து கழுவி, வெறிநோய் வைரஸைக் கொல்ல வேண்டும்.நிறைய தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். நாய்க்கடிக்குப் பின், அது எந்த இடத்தில் கடித்தது என்பதைப் பொறுத்தும், எவ்வளவு ஆழமாகக் கடித்துள்ளது என்பதைப் பொறுத்தும் தான் 3 வகையான மருந்துகள் தரப்படுகின்றன.

உலக நல நிறுவனம்.. (WHO) வெறிநாய்க்கடிக்காக தந்துள்ள அட்டவணை:

வெறிநோய் உள்ளது என சந்தேகப் படும் நாய்க்கடிக்காக தரப்படும் சிகிச்சை:

1. வெறிநோய் இருந்திருக்குமோ என சந்தேகப் படும் நாய் நக்கினால்/உணவு தரும்போது அந்த நாய் நம் உடலை தொட்டால், காயம் இன்றி இருந்தால், எந்த மருந்தும் தரவேண்டியதில்லை.

2. கடித்த நாய் வெறிநோயுள்ளதோ என சந்தேகித்து, அதன் கடி லேசான பிறாண்டலுடன் இருந்தால், நம் உடலின் மேல் தோல் மட்டும் சுரண்டப் பட்டிருந்தால், இரத்தம் வரவில்லை என்றால், நீங்கள் கவலைப் படவேண்டாம். அதற்கு உடனடியாக தடுப்பூசியும், காயத்தைச் சுத்தம் செய்து, அதற்கான சிகிச்சையும் உடனடியாக செய்ய வேண்டும்.

3. நாய்க்கடியினால் அதன் ஒற்றைப் பல்/ பல பற்களின் பதிவு உடலில் உண்டானால், தோலுக்குக் கீழே காயம் இருந்தால், உடனடியாக தடுப்பூசியும் போட வேண்டும். பின்னர் வெறிநோயின் இம்முயூனோகுளோபுலினும் போடவேண்டும்; காயத்தை நன்கு துடைத்துவிட்டு அதற்கான சிகிச்சையும் தரவேண்டும்.

  • கட்டாயமாய் வளர்முக நாடுகளில், கடித்த நாய்க்கு, தடுப்பூசி போடப்பட்டதா இல்லையா என்ற சந்தேகம் வந்தாலும், வராவிட்டாலும், கட்டாயமாய் சிகிச்சையைத் துவங்க வேண்டும்.
  • நிச்சயமாய் வெறிநோய் தடுக்கக் கூடிய நோய்தான்.
  • இந்த நோய்க்காக பல இடங்களில்(multi-site intradermal regimen) ஊசி போடுவதும் உண்டு. இந்த வகையான மருந்து விலை குறைவானது.

உலக நல நிறுவனத்தின் கூற்றின்படி, வெறிநோய் வந்துவிட்டால் எப்படி 100% இறப்பு என்பது எப்படி நிச்சமோ அதே போல, வெறிநாய்க் கடித்தபின் சரியான சிகிச்சையினைத் தந்தால் 100% தடுப்பு நடவடிக்கையும், உயிர் காப்பாற்றப் படுதலும் நிச்சயம்.

WHO promotes wider access to appropriate post-exposure treatment using modern tissue culture or avian embryo-derived rabies vaccines through:

  • use of the multi-site intradermal regimen to reduce the cost of post-exposure treatments;
  • increased production of safe and efficacious rabies biologicals, which are in critical short supply globally, particularly rabies immunoglobulin;
  • continuing education of health and veterinary professionals in rabies prevention and control; and
  • immunization of 70% of the dog population to stop circulation of the virus at source.

Intramuscular schedules

One dose of the vaccine should be administered on days 0, 3, 7, 14 and 30. All intramuscular injections must be given into the deltoid region or, in small children, into the anterolateral area of the thigh muscle. Vaccine should never be administered in the gluteal region.

Abbreviated multisite schedule

In the abbreviated multisite schedule, the 2-1-1 regimen, one dose is given in the right arm and one dose in the left arm at day 0, and one dose applied in the deltoid muscle on days 7 and 21. The 2-1-1 schedule induces an early antibody response and may be particularly effective when post-exposure treatment does not include administration of rabies immunoglobulin.

Symptoms of furious rabies:

  • progressive anxiety and agitation.
  • stiff neck
  • seizures
  • overproduction of tears and saliva (end stage)
  • convulsions
  • dilated pupils
  • photophobia - abnormal sensitivity to light
  • thermophobia - abnormal sensitivity to temperatures
  • hydrophobia - drinking water becomes increasingly difficult. When the patient tries to drink the throat muscles and the diaphragm go into a spasm. Eventually it becomes so bad that just the sound or sight of water can bring on spasms.
  • insomnia
  • partial paralysis
  • delusions
  • hallucinations
  • alternating periods of mental clarity with severe anxiety, followed by confusion, delusions and hallucinations.

Virtually all patients die within two to ten days after the first symptoms appear. The extremely few who are known to have survived have had severe brain damage.

வெறிநோய் தடுப்பு சங்கம்..!

இந்தியாவில் வெறிநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்காக ஒரு சங்கம் இருக்கிறது.அதன் பெயர், வெறிநோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சங்கம்.(Association for the Prevention and Control of Rabies in India (APCRI) .இது 1998 ல் ,17 மருத்துவர்களைக் கொண்டு உருவானது. அவர்கள் அனைவரும் வெறிநோய் தடுப்பிற்காக அனைத்து நடவடிக்கைகளையும் மிகவும் பொறுப்புடன் கவனித்து வருகின்றனர்.

நீங்கள் செய்யவேண்டியவை..:

  • நீங்களோ/குழந்தைகளோ இறந்த விலங்குகளை கையால் எடுக்காதீர்கள்.அதன் மூலமும் வெறிநோய் வரலாம்.
  • வீட்டில் வளர்க்கப்படும் அனைத்து விலங்குகளுக்கும் வெறிநோய்த் தடுப்பூசி கட்டாயமாய் போடவேண்டும்.
  • விலங்குகளால் ஏற்படும் எந்த காயத்தையும் உடனடியாகத் துடைத்து, அதற்கு தகுந்த மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டும்.
  • நாம் எந்த விலங்குகளுடனும் தொட்டு விளையாடி பழகக் கூடாது.
  • குழந்தைகளிடம் விலங்குகளைத் தொடக்கூடாது என்று சொல்லித் தரவேண்டும்.
  • நாய்களிடம் மிக ஜாக்கிரதையாகவே பழகுங்கள்.
  • உலகம் முழுவதுமே. வெறிநோய்க்கான தடுப்பு மருந்து தயாரிப்பு போதுமானதாக இல்லை எனப்து வருத்தத்திற்குரிய செய்தியாகும்.