Tuesday, April 22, 2014

அம்மாவும்..பாப்பாவும்.. ஒரு வியத்தகு உலகம்.. 1..april 23 2014 at 12:10am

அம்மாவும்..பாப்பாவும்.. ஒரு வியத்தகு உலகம்..

april 23  2014 at 12:10am

தாய்மை....!

   தாய்மை மகத்தானது..பெருமை மிக்கது அதன் தியாகம் சொல்லி மாளாது என்றெல்லாம் சொல்லப்படுவதுண்டு.ஆனால் தாய்மை என்பதும், ஒரு மகவை சுமார் 9.5 மாத காலம்(37 வாரங்கள் ) தன கருவறையில்  சுமப்பதும் ஒருவர் வாழ்வின் மறக்க முடியா அற்புத கணங்கள்..அதனை ஒருவர் அனுபவித்தால்மட்டுமே.. உணர முடியும். தாய்மை அடையா நிலையும் மனதுக்குள்  மற்றும்  கண்ணுக்குள் வேதனையுடன் வந்து போகிறது.கருக்காலம் /தாய்மைப் பேறு /கர்ப்பம் என்பதெல்லாம் ஓர் உயிர் உருவாக்கலின் அதிசய நிகழ்வுகள்தான்...உயிரின வாழ்வின் ஆச்சரியமான ஒன்றுதான்..நீங்கள் அம்மாவின் கருவறைக்குள் ஒரு சிறு புள்ளியிலிருந்து/மணல் துகள் அளவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் உருவெடுத்து பெரிதாய் வளருகிறீர்களே ..எப்படி  எப்படி..?

    சந்தோஷப் பொட்டலம்...

   தன்  கருவைச் சுமக்கும்போது சுகமும், சுமையும், சந்தோஷமும், சில சங்கடங்களும் கூட இருக்கும்,, அது மகத்தானது..உலகம் உயிரின பெருக்கம் அதுதான்..உங்களின் கருவை  உங்கள் கையில் குழந்தையாக முதல் முறை சந்திக்கும் தருணம்தான் ஒருவர் தன வாழ்வின் உச்ச கட்ட சந்தோஷத்தை நீங்கள் அனுபவித்த கணங்கள் ,அதுதான் உலகின் மிகச் சிறந்த பரிசு உங்களுக்கு  ! ஒரு பெண்ணின் வாழ்நாளில்  மறக்க முடியாத காலமும் அவைதான்.. வலிகள் நம்மைத்  துரத்த துரத்த முடிவில் நாம் வலியைத் துரத்தி சந்தோஷப பொட்டலத்தை  குழந்தையாகப் அவிழ்க்கிறோம்.அதனைப் பார்ப்பீர்கள்..அப்பப்பா  மகிழ்ச்சிக் கடல் கொந்தளிக்கும்.
   மாற்றம்..மாற்றம்..

  கரு வளரும்போது வியத்தகு, அதிசயமான ஏராளமான , எக்கச்சக்கமான மாற்றங்கள் உங்கள் உடலிலும், கருவின் உடலிலும்...அதன்பா உங்க பாப்பாவின் உருவாக்கத்திலும்.





உயிர்ப் பயணம் துவக்கும் ஒற்றை செல்..
Cell Size and Scale
  மனிதக் கருவும் எல்லா உயிர்களும் போலவே,,ஒற்றை செல்லில்தான்  தன்  உயிர்ப்  பயணத்தைத் துவங்குகிறது.அதனை நாம் கண்ணால் காணவும் கூட முடியும். ஆனால் மணல் துகள் சைசில் உள்ள அந்த சின்ன முட்டை,,,குழந்தையாகப் பரிணமித்துப் பிறக்கும்போது அதன் உடலில் சுமார் 200,000,000 செல்களாக பிரம்மாண்டமாய்  பல்கிப் பெருகி பரிணமித்து விடுகிறததே .அடேயப்பா  என்ன அதிசயம்.?.இந்த உருமாற்றம் செய்தவர் யார்?

  உயிரின் கரு..முட்டைதான் ,,


   ஒரு கரு முட்டையின் எடை என்பது 0.00177 -0.0042 மி.கி மட்டுமே இருக்கும். அதன் விட்டம் 0.15-0.2 மிமீ. இந்த குட்டியூண்டு முட்டைதான்,கருவாக உருவாக்கி வளர்ந்து.பின்னர்  பிறக்கும் போது  சுமார் 3 கிலோ எடையுள்ள குழந்தையாக இந்த உலகுக்கு வருகை புரிகிறது..அதாவது, ஒரு குழந்தை என்பது முட்டையை விட சுமார் 6,000,000 மடங்கு அதிக எடையுள்ளது,என்றால் பிரமிப்பு தானே..இது எப்படிப்பா? இதெல்லாம் கருவறை செய்யும் விந்தை மிகு உருமாற்றமும்,வேதிமாற்றங்களும் தான். இதுவரை கடந்த ஆயிரம் ஆண்டுக் காலமாய் ஏராளமான அறிவியல் கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் கூட ஒரு கருவறை(Uterus) செய்யும் பணியை,அல்லது ஒரு செயற்கை கருவறையை இந்த அறிவியல் உலகம் இதுவரை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.


முட்டையும், விந்தும் இணையும் தருணம்.


   இயற்கைதான் ஒரு முட்டையுடன் சேரும் விந்தணுவை நிர்ணயம் செய்கிறது.அப்படித்தான் சொல்ல  வேண்டும் இதனையும் செயற்கையாய் செய்ய முடியாது.முட்டையும் விந்தும்ஒ ன்று  சேரும்/இணையும் அந்த கணத்தில் தான் கரு ஆணா , பெண்ணா என்ற நிர்ணயம்/ செய்யும் தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது.அது மட்டுமல்ல.முட்டை தான்  எந்த விந்துவுடன் இணைவது என்ற முடிவையும்  முட்டைதான் எடுக்கிறது. அந்த விந்துக்கு மட்டுமே, முட்டையின் மேலுறை விலகி முட்டையின் எல்லைக்குள் நுழைய வழி தரப்படும். . பொதுவாக ஒரு விந்து மட்டுமே முட்டைக்குள் போகும்/அல்லது அனுமதிக்கப்படும்.அது தவிர மற்றது முட்டைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும்.அதன் வழி உடன் அடைக்கப்படும்.

   முட்டைதான் கருவின் ஆதார சக்தி..!


  இன்னொரு விஷயம் தெரியுமா? கரு வளருவதற்கான அனைத்து வேதிப் பொருள் அடங்கிய ஆதாரங்களையும்  தருவது அன்னையின் முட்டை மட்டுமே..ஆம் அதுதான் கரு வளர்வதற்குரிய அனைத்து பொருட்களையும், சக்தியையும்,  அம்மாவிடம் இருந்து உருவாக்கி  சுமந்து வருகிறது.அதனால்தான் அவர் (முட்டை)அசைவதே இல்லை. அசைந்தால் முட்டையிடம்  இருக்கும் ஆற்றல் இழந்து விடும்..கரு உருவாவதில் சில குறைபாடுகள் வந்துவிடும் என்று அசையாமல் வேதிப் பொருட்களை கட்டிக் காத்து தன சந்ததிக்குத் தருகிறது முட்டை.ஆனால் விந்தணுவார்  என்பவர் எப்போதும் போல சும்மா ஜாலியான ஊர் சுற்றிதான். அவர்தான் ஊர் முழுதும் சுற்றி வந்து முட்டையைத் தேடி வருவார்.ஆடம்பரமாக சுற்றி சுற்றி  அனைத்து சக்திகளையும் இழந்துவிட்டு, அவர் வந்து செய்வது என்பது , கரு உருவாக்க கொண்டு வருவது வெறும் X /Y குரோமோசோம் மட்டுமே.கீழே உள்ள படத்தில் பெரிதாக் இருப்பது X குரோமோசோம். சிறிதாக துளியூண்டு இருப்பது Y குரோமோசோம். முட்டைக்குள் விந்தணுவின் குரோமோசோம்/DNAஉள்ள (பாலினம் நிர்ணயம் செய்ய தேவையான பகுதி) மட்டுமேமுட்டைக்குள் நுழையும்.  உயிர் உருவாக்க, வளர என அனைத்து நிர்மாணப் பணிக்கான பொறுப்பும் வழக்கம் போல் பெண்ணுக்குத் தாங்க..இயற்கை பெண்ணை உயிரின் உருவாக்கமாய் , தியாக பிம்பமாய் படைத்திருக்கிறது என்பீர்களே..அவள்தான் உலகத்தின் உந்து சக்தி..

   உடனடித் தீர்மானங்கள் நடக்கும் கணம்..

  அது மடடுமா,,முட்டையும் விந்தும் சேர்ந்து கருவுறுதல் நடந்தவுடனே..பல முடிவுகள் அங்கே உடனடியாக மிகத் தீர்மானமாக அமலாகின்றன. பாலினம், அதான்பா, நீ ஆணா ,பெண்ணா என்பது உடனே தெரிந்து விடுகிறது. அதுதான் கண்ணு, முட்டையில் ஒரே ஒரு வகைதான் உண்டு..அதில் ஒரு X குரோமோசோம் மட்டுமே பெற்றிருக்கும்.. விந்துவில்தான் இரு வகைகள் உண்டு. ஒன்றில் Y குரோமோசோம் இருக்கும். இன்னொருவகையில் X  குரோமோசோம் இருக்கும். முட்டைக்குள் X விந்து நுழைந்தால் கரு பெண்ணாக உருவெடுக்கும். Y விந்து நுழைந்தால் கரு ஆணாக வளரும். அத்துடன் கருவுறும்போது உங்களின் தோலின்  சொந்த நிறம்..(அதுதான் நீங்கள் சிவப்பாக மாறுவதற்கு வாங்கித் தடவுகிறீர்களே  அந்த சிவப்பழகு கிரீம். அந்த கிரீமால் தோலை சிவப்பாக்க முடியாதுங்க..நம் தோல் ..அது மரபணு தந்த கொடைங்க ), கண்களின் நிறம்,போன்றவையும், உங்களின் அனைத்து மரபணு குணங்களும் அந்த கணத்தில்தான்  உருவெடுக்கின்றன.எப்படிப்பா இந்த கலை..\

 X மற்றும் Y குரோமோசோம்..

 ஒரு ரகசியம் சொல்லட்டுமா? ஆனால் என்னை கல்லைக் கொண்டு அடிக்கக் கூடாது. .
  2010 ம் ஆண்டின் கண்டுபிடிப்பின் படி, X மற்றும் Y குரோமோசோம்கள் இரண்டும் ஒரே வகையான குரோமோசோம்களிடமிருந்துதான் எதோ ஒருவகையான் சிறு மாற்றம் ஏற்பட்டு உருவாயின.
  ஆனால்  X மற்றும் Y குரோமோசோம்கள் இரண்டும், சுமார் 300,000,000 (30 கோடி ) ஆண்டுகளுக்கு முன்பு இரண்டும் தனித் தனியாகப் பிரிந்து தனித் தனி தடத்தில், தனக்கென தனி  பாட்டை உருவாக்கி பயணிக்கத் துவங்கின.இதில்வெறும்பார்வைக்கே.;இப்பார்வையில் உருப்பெருக்கியில் பார்க்கும்போதே..X குரோமோசோம் பெரிதாகவும், Y  குரோமோசோம் சிறியதாகவும் இருக்கும்.மனித  X  குரோமோசோமில்  2,000 மரபணுக்களும், Y குரோமோசோமில் 78 மரபணுக்களும் மட்டுமே  இருக்கின்றன..காரணம் என்னவெனில், இவை உருவான காலப் போக்கில்,கடந்த 30 கோடி ஆண்டுகளில்   Y குரோமோசோம் தனது 1,438 மரபணுக்களில், 1393 மரபணுக்களை இழந்து விட்டன..இன்னும் 10 மில்லியன் ஆண்டுகளில் இவை முழுமையும் கூட அழிந்து விடலாமோ என அறிவியலார்கள் அஞசுகின்றனர்.

      கருவறையின் உயர்வு...



  கருவை சுமக்க காத்திருக்கும் கருவறை யின் அளவு உங்களின் கமுஷ்டி அளவுதான்.ஆனால் இத்தனூண்டு கருவறை,,கருவை சுமந்து அது வளரும்போது சுமார் 500 மடங்கு உருப்பெருக்கம் செய்கிறது.என்றால் வியப்பாக இல்லை. ஒரு ரப்பர் பை அல்லது நெகிழி கூட ஒரு அளவுக்கு மட்டுமே மீட்சி பெறும் ..இந்த கருவறையை இப்படி கிழியாமல், நெகிழச் செய்து, விரிவடைந்து இணக்கமாக உங்களைச் சுமக்க சொல்லித்தந்தது யார்? வேறு இயற்கை பரிணாமத்தின் பரிமாணம்தான் ,

 கருவும், கருவறையும்..
   உயிர் பரிணமிக்கு முன் சாதாரண நிலையில் கருவறையின் எடை என்பது சுமார் 50 கிராம்தான்.அதன் நீளம் 7,6 செ .மீ. அகலம்:4.5 செ ,மீ.கனம் :3.0செ .மீ ஆனால் கருவுற்ற காலத்தில் அதன் எடை என்பது சுமார் 1 கிலோதான்.சின்ன குட்டியூண்டு கருவறைக்குள் கருவுறுதல் நிகழ்ந்ததும்,அந்த முட்டை எங்கடா போயி பத்திரமா உட்காருவோம்னு சுமார் ஒரு வாரம் கருவறைக்குள் ரவுண்டடிச்சி அப்புறமா கருவறையின் ஏதாவது ஒரு பக்கத்தில் செட்டில் ஆகி வளரத  துவங்குகிறது..பாவம் இப்பதான் கரு உட்கார்ந்திருக்கு..அதை இப்ப தொந்தரவு பண்ண வேணாம்..அப்புறமா வருவோமே..




Thursday, February 20, 2014

லுட்விக் எட்வர்ட்டு போல்ட்ஸ்மேன் (Ludwig Eduard Boltzmann (February 20, 1844 – September 5, 1906)

லுட்விக் எட்வர்ட்டு போல்ட்ஸ்மேன் (Ludwig Eduard Boltzmann (February 20, 1844 – September 5, 1906)

February 21, 2014 at 1:49am
லுட்விக் எட்வர்ட்டு போல்ட்ஸ்மேன் :


  இனிய அதிகாலையின் அன்பு சூழ்ந்த மகிழ் வணக்கம். ஆஸ்திரியா நாட்டு விஞ்ஞானியான லுட்விக் எட்வர்ட்டு போல்ட்ஸ்மேன் என்ற அற்புதமான விஞ்ஞானியின் பிறந்த தினம்..இன்று பிப்ரவரி 20.லுட்விக் எட்வர்ட்டு போல்த்மேன் அடிப்படையில் ஒரு இயற்பியலாளர்.மற்றும் தத்துவ ஞானி. அவரின் வாழ்வில் சாத்தித்தது என்னவென்றால்,புள்ளியியல் இயக்கவியல் (statistical mechanics) என்ற புதிய இயற்பியல் துறையை உருவாக்கி வளர்த்தவர். இதுதான்  வாழ்நாள் சாதனையாகும்.

   

இந்த புள்ளியியல் இயக்கவியலில், இங்கே, அணுக்களின், நிறை (mass),மின்னூட்டம் (charge) மற்றும் கட்டமைப்பு (structure) போன்ற  குணங்கள்/பண்புகள் எப்படி இருக்கும் என்றும், அவை எப்படி நடந்து கொள்ளும் என்றும், முன்கூட்டியே அனுமானம் செய்தது விளக்கி இருக்கிறார்.இவைதான் ஒரு பொருளின், பிசுக்குத்தன்மை (viscosity), வெப்பம் கடத்தும் திறன் ( thermal conductivity) மற்றும் விரவுதல் (diffusion) போன்ற பொருட்களின் தன்மையை  உருவாக்குகின்றன என்றும் முன் அனுமானம் செய்து விளக்கம் தந்தவர் லுட்விக் எட்வர்ட்டு போல்தட்மேன்

  

இயற்பியலின் அடிப்படை தத்துவ மமற்றும் பண்புகளான இவைதான், முக்கியமானவை..எனற இயற்பியலின் அடிநாதத்தை தொட்டவர் லுட்விக் எட்வர்ட்டு போல்ட்ஸ்மேன்..இதுவே இவாது வாழ் நாள் சாதனை ,மட்டுமல்ல. இவரின் தனிப்பட்ட  சாதனையும் கூட.

 லுட்விக் எட்வர்ட்டு போல்த்மேன், 1844, பிப்ரவரி 20ம் நாள். ஆஸ்திரிய சாம்ராஜயத்தின் தலைநகரான் வியன்னாவில் பிறந்தவர் லுட்விக் எட்வர்ட்டு போல்ட்ஸ்மேன்.இவரின் தந்தை , லுட்விக் ஜார்ஜ் போல்ட்மென் (Ludwig Georg Boltzmann) வருவாய்த்துறையில் பணியாற்றும் ஓர் அதிகாரி. அவரின் தாத்தாதான் குடும்பத்தை பெர்லினிலிருந்து, வியன்னாவுக்கு மாற்றியவர்.அவர் அடிப்படையில் ஒரு கடிகார உற்பத்தியாளர்.அதனை .உருவாக்கும் தொழில் செய்து வாழ்க்கையை நகர்த்தியவர்;. 

  

லுட்விக் எட்வர்ட்டு வியன்னா பல்கலையில் 1863 ல்  இயற்பியல் படித்தார். 1866ல் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார்.பின் அவரது ஆசான் ஸ்டீபனின் (Stefan’) கீழேயே உதவியாளராகப் பணிபுரிநதார்.தான் படிதஹ வியன்னா பலகலையிலேயே கணிதப் பேராசிரியராகவும் பணி செய்தார்.

   

அதன்பின் 1870ல் இவர் தனது கண்டுபிடிப்புகளை வெளியிட்டார்.அதில் வெப்ப இயக்கவியலின் இரண்டாவது விதியை(Second law of thermodynamics,) தெளிவாக விளக்கினார். இதில் இயக்கவியலின் விதிகளையும் சொன்னார். 1876 வரை வியன்னா பல்கலையிலேயே கணிதவியல்  பேராசியராக இருந்தார்.

   

பின் 1872ல், ஒரு கண்டிப்பான, கறாரான பெண் ஹென்ரிஎயட் வான் ஐஜெ ண்ட்லெர் (Henriette von Aigentler,) என்பவரைச் சந்தித்தார்.இது லுட்விக் வாழ்வில் ஒரு  அமைந்தது. ஹென்ரிஎயட் வானின் கணிதம் மற்றும் இயற்பியலின் அசகாய திறமை. அவரை லுட்விக் பால் ஈர்த்தது.1876, ஜூலை 17 ம் நாள் லுட்விக் , ஹென்ரிஎயட் கரம் பற்றி தன இல்வாழ்க்கையைத் தொடங்கினார். இந்த தம்பதிக்கு 3 பெண் குழந்தைகளும், 2 ஆண்  மகவுகளும் பிறந்தன.

   லுட்விக் எட்வர்ட்டு போல்ட்ஸ்மேன் தனது வாழ்நாளை  மிக சந்தோஷமாவே  க்ரெசில் (Graz) கழித்தார்.பின் 1885 ல், ஆஸ்திரியாவின் அறிவியல் ராயல்  அகாடமியில் உறுப்பினராகவும் இணைந்தார் பின் மூனிச் பல்கலையின் Theoretical Physics துறை இயக்குனராக1890 ல் பொறுப்பேற்றார். 

  .

 இவ்வளவு அறிவும் திறமைகளும் ஒருங்கே அமைந்த லுட்விக் எட்வர்ட்டுபோல்ட்ஸ்மேன் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர். திடீர்  திடீரென கோபம், வருத்தம், கவலை என பன்முக  உணர்வுகளுக்கு தாவிக்  கொண்டே இருப்பார்.எப்போதும்  ஒரு  உணர்வுடன் இருக்கவே  மாட்டார்.மேலும் இவருக்கு நரம்பு தொடர்பான சின்ன வியாதி (bipolar disorder) இருந்தது. அ தனாலும் அதனைத் தொடர்ந்த மனக் குழப்பத்தினாலும்,மன அழுத்தத்தாலும்  அ டிக்கடி தற்கொலை முயற்சிகள் செய்திருக்கிறார். அவரால் அவரின் இறுதிக் காலத்தில் நிம்மதியாகவே வாழ முடியவில்லை.அடிக்கடி வாழ்நாளை முடிக்க முயன்றவர்,

  

ஒருநாள் இயற்கையாக அன்றி, செயற்கையாக அவரின் வாழ்வில் முடிவு ஏற்பட்டது.அதுதான் இறுதியாக போல்ட்ஸ்மேன் 1906, செப்டம்பர் 5 ம் நாள் டுயூனொவில் (Duino), ஒரு கோடை விடுப்பில் தன்னைத்தானே தூக்குப் போட்டுக்  கொண்டு தன உயிரை மாய்த்துக் கொண்டார்.இது கொடுமையான செயலதான். 


  

நிலவில உள்ள ஒரு பள்ளத்திற்கு லுட்விக் எட்வர்ட் போல்ட்ஸ்மேன் என்று பெயர் சூட்டி இருக்கின்றனர.
  • Named for Ludwig Eduard Boltzmann (1844-1906), an Austrian physicist.
  • This name was assigned in the Rectified Lunar Atlas (1963), based on Earth-based photos of the libration zones, and approved by the IAU in 1964, to which it was described as a 70 km diameter crater at 75.5°S, 96.0°W.
  • In preparing its initial long list of farside names, the IAU Working Group for Lunar Nomenclature was initially unable to find evidence in space-based overhead views of a significant crater at that location, and announced at the August 1970 meeting its plan of deleting the 1964 approval and reassigning the name to the larger nearby crater now known as Lippmann.



.


Friday, August 30, 2013

குழந்தை .. உலகை சந்தித்த முதல் மூன்று நிமிடங்களில் ...

August 30, 
   பெண்ணெனும் பெருமை..

வணக்கம் சோதரிகளே.. ..யாராவது ஏன்  பெண்ணாகப் பிறந்தேன் என்று வருத்தப்பட்டு பாரம் சுமபப்வர் யாரவது இருக்கிறீர்களா? அப்படி ஏதும் தகுதிக் குறைவான எண்ணம் எப்போதுமே வேண்டாம். நீங்கள் இந்த புவியின் பாக்கியவான்கள்..என்ன புதிர் போடுகிறீர்கள் என்கிறீர்களா? ஆம்..புதிர்தான்..பெண்ணுக்கு மட்டுமே புரிந்த புதிர் இது.. அவள் மட்டுமே அறிந்த இன்ப வலி, அவள் மட்டுமே உணர்ந்த எல்லையற்ற  சந்தோஷம் இது..யாருக்கெல்லாம் அம்மாவாகும் பாக்கியம் கிட்டி இருக்கிறதோ.. அவர்கள் பூமியில் சொர்க்கத்தைப் பார்த்தவர்கள்..யாருக்கெல்லாம், இயற்கைப பேறுகால வலியுடன் குழந்தையைப் பெற்றார்களோ..அவர்கள் இந்த பிரபஞ்ச ரகசியத்தை அறிந்துசொர்க்கம் தாண்டி தரிசித்தவர்கள்..அப்பனே..

   பேறு காலப் பேறு ..

    குழந்தைப் பிறப்பு என்பது இந்த பிரபஞ்சத்தில் அற்புதமான, திரை நிகழ்வு போன்ற ஆச்சரியமான எண்ணி எண்ணி மாளாத வியப்பு கொண்ட விஷயம்..ஒரு பெண் தன உயிரை /தன குழைந்தையை ஈனும்போது, அவள் கிட்டத்தட்ட 22 எலும்புகளை உடைக்கும்போது ஏற்படும் ஒட்டுமொத்த வலியை உணருகிறாள என்று அறிவியல் சொல்கிறது.அத்தனை வலி யையும், மகவைப் பார்த்த சந்தோஷம் விழுங்கி ஏப்பம் விட்டுவிடுகிறதே நண்பா..இதனை என்றாவது ஆண்  நண்பர்கள் அனுபவிக்க முடியுமா? எண்ணிப்  பார்க்க முடியுமா? 


பூவுலகின் தரிசனம்..

     அது போகட்டும்.. அம்மாவின் இருட்டான கருவறையைவிட்டு வெளியேறி..இந்த புவியைத் தரிசித்த புத்தம் புதிய மலரின் விரிதலில் உருவாகும் மாற்றங்கள்..அப்பப்பா சொல்லி மாளாது. அத்தனை அற்புதங்கள் அதன் உடலில்,..கற்பனைக் கெட்டாத அதிசயங்கள் நிகழும் கணங்கள் அவை..அனைத்தும் வாழ்வதற்கான போராட்டமும், அதன்  புதிய சூழலுக்கான தற்காப்பு நிகழ்வுகளும், தகவமைப்பும் தான்.அனைத்தும் இயற்கையின் கொடைகள்தான்..பரிணாமத்தின் சங்கதி இது.  

  குழந்தையின்..முதல் குரல்..!
   

    புதிய உலகை சந்தித்த உங்களின் அற்புத உயிர் கொடுக்கும் முதல் குரல்/ஒலி /அழுகை/கத்தல் எது வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். அந்த "மா" என்ற பீரிட்டு எழும் அழுகை ஒலிதான் நண்பா  அதன் மிகு வலியும், வாழ் நாளும்தான். அந்த சத்தம்தான்  குழந்தையை இந்த உலகில் தக்க வைக்கிறது. குழந்தை பிறப்பை ஒட்டி நாம் சந்தோஷப்படுவதும்,கொண்டாடுவதும் அது பிறந்ததால் அ ல்ல,பிறந்த  குழந்தை வாய்விட்டு வீரிட்டு அழுவதால்தான்..

நீர் உலகும், நில உலகும்..!

    அதுவரை நீர்நிறைந்த உலகில், நீர்ச்சூழலில் அம்மையிடம் 
வசதி யாய் வாழ்ந்த கரு, புதிதாக காற்று நிறைந்த உலகை தரிசனம் செய்கிறது. முதல் காற்றை சுவாசிக்கும்  அனுபவம் நிறைய சங்கடம் தங்களை உருவாக்குகிறது. .மழலைக்கு..அதன் விளைவாக பல் உடலியல் மாற்றங்கள்..அப்பாப்பா சொல்லி மாளாது.அதுதான் என்னான்னு பாக்கலாமா? அப்புறம் மயக்கம் போட்டா நான் பொறுப்பு இல்லே..என்ன தெரியுதா?
  
  சின்ன உயிர் வாழ, சின்ன சின்ன மாற்றங்கள்..!
  

    இப்ப ஆரம்பிக்குது சின்ன  நடவடிக்கைகள்..அந்த சின்ன உயிரா, இத்தனை செயல்களைச்  செய்யுது.. ஆமாங்க, நம்ம கருவறையிலே ஓடித்திரிந்த இந்த சின்னவர்தான், இப்ப பூமியிலே கீழே விழுந்தவர்தான் இதனை மாற்றங்களை தன்னுள் நடத்துகிறார். இதோ அவரே பேசுகிறார் ..கேளுங்களேன்..


  தன்னந்தனியாய் தாக்குப் பிடிக்க..

 "நான் அம்மா கருவறையை விட்டு அவருடைய முயற்சியினாலும், என் முயற்சியினாலும், இந்த வெளிச்சம் நிறைந்த உலகைப் பார்க்க முதன் முதலில் வெளியே வருகிறேன்.. அம்மா,எனக்குப்  பயம்மா இருக்கே, எப்படி சமாளிக்கப் போகிறேன். அம்மா எப்படியும் எனக்கு உதவி செய்வாங்க..என்னை உருவாக்கி,நான் வயித்துக்குள்ளே இருந்து படுத்திய பாடுக்ளைஎல்லாம், வெளியே சொல்லாமல், என்னைத் தூக்கி வெளியேயும்  போடாமல், மனசுக்குள் வைத்து, எனது படுத்தல்களை அணு அணுவாய் 39 வாரங்கள் வரை சுமந்து மகிழ்ந்த என் அன்னையல்லவா அவர். அவர்தானே எனக்கு எல்லாமும். நான் வெளியே வந்தால் அவர் என்னைப் பார்த்துக் கொள்வார்..இருந்தாலும், என்னைப் பார்த்துக் கொள்ள நானும் கொஞ்சம் முயற்சி எடுத்துக் கொண்டு கற்றுக் கொள்ள வேண்டுமல்லவா? அதன் முதல் சுற்றுதான்.இது. .தனியாய் தன காலில் நிற்பதற்கான முயற்சிதான் என முதல் சுவாசம்.."


மக்களில் ஒருவன்..

"பெருத்த முயற்சியால் வந்தேனே.நான் வந்தேனே...வந்தே விட்டேன், இந்த உலகின் மக்களுடன் .ஐக்கியமாக."


அம்மா..அம்மா..!

  
  "அம்மா உடம்பிலிருந்து வெளியே  வந்ததும், புவியின் காற்று என் மூக்குக்குள் நுழைந்து , பின்னர் என் நுரையீரலுக்குள் மெல்ல மெல்ல எட்டிப் பார்க்கிறது. என்னால் அந்த வேதனையைத் தாங்க முடியவில்லையே அம்மா..என் அம்மாவே.. நான் இந்த  உலகில்உயிர் வாழ இது அத்தியாவசியம் என்கிறீர்களா என் அன்னையே.. சரி கற்றுக் கொள்கிறேன்.அனைத்தையும் உங்களின் அன்புடன்..". 


   எனது முதன் முதல் முயற்சி..

    "அம்மாவின் கருவறையில் இருந்த வரை  வரை என நுரையீரலுக்கு வேலையே இல்லை..சும்மா ஒரு 5% இரத்தம் எப்பவாவது வரும்.இதுவரை என் நுரையீரல்  புதிதாய் கடையில் வாங்கிய பலூன் போல சப்பிக் கிடந்தது.அம்மாவின் இருட்டு கருவறையில் நான் இருந்த போது, அவங்க சுத்தம் செஞ்ச ரத்தத்தை நேரடியா எனக்கு நஞ்சுக் கொ டி வழியா கொடுத்துடுவாங்க. என் சுத்த ரத்தம் நேரடியா இருதயத்துக்குப் போய்விட்டு, பின் எனது உடம்பு முழுவதும் வரும். என் கிட்ட சேர்ந்த அசுத்த ரத்தம், அம்மாவோட நஞ்சுக்கொடி வழிய அம்மா கிட்டே போகும், சுத்தப் படுத்த. எனக்கு ஜம்முனு தூங்கறத தவிர வேற வேலைய இல்லை. .நான் கஷ்டப் பட பொறுக்காத அன்னை மனம். அது.இப்ப நான் வெளியே வந்ததும் நானே சுவாசிக்க வேண்டி இருக்கிறது. அதற்கான முயற்சிகள்.தான் இவை.


   முதல் வலி...

     நுரையீரலுக்குள் நுழைந்த காற்று என்னை மூச்சு முட்டச் செய்கிறது. நுரையீரலின் சுவரை முட்டிய காற்று என்னைத் திணற வைக்கிறது. அதனால் தான் நான் "ம்..மா.மா " என வாய்விட்டு அலறுகிறேன்.. அந்த சத்தம்தான் என்னை இந்த உலகில் வாழ வைக்கும் முதல் குரல், முதல் உதவி, என் உயிர்ச் சக்கரத்தின் அச்சாணி அதுதான்.அதுதொடர்பாய்  ஏராளமான் உடலியல் மாற்றங்கள்.அதுவரை சுத்த ரத்தம் அம்மா மூலம். இப்ப நானே ரத்தத்தை சுத்தம் செய்ய வேண்டும். அதற்கான பிரயத்தனம்தான் இந்த முயற்சிகள் அண்ணே   "  

உயிர் வாழ்தலின் முதல் பத்து நொடிகள்..

     "இன்னும் இருக்கிறதே...!பிறக்கும்போது என் நுரையீரலுக்குள் பனிக்குட நீர்(amniotic fluid ) இருக்கும். அம்மா இடத்தில் இருக்கும்போது என் நுரையீரலுக்கு வேலை இல்லை.இப்ப நான் அம்மா கிட்ட இருந்து வெளிவந்து, இந்த உலகத்தைப் பார்த்த 10 நொடிக்குள் என் நுரையீரலுக்குள் காத்து நுழைந்து நுரையீரல் செயல்பட்டாக வேண்டும்.  இப்ப என் நுரையீரலுக்குள காத்து நுழைந்ததும், நுரையீரல் சுவத்துக்குள் போய் காற்று முட்டும். அந்த இடம் பெரிதாகும். அதற்குத் தகுந்தாற்போல் எனது மைய நரம்பு மணடலம், உடனடியாக எதிர்வினை செய்யும். ஏனெனில் எனது உடல் வேறுபட்ட வெப்ப நிலையை சந்திப்பதால், நான் தடுமாறி விடுவேன் என   வெளிச் சூழலுக்கும், வெப்பத்துக்கும் தகுந்த மாதிரி செயல்படும்".

  முதல் சுவாச முத்தம்..!

     " நான் அம்மாவிடம் இருந்து வெளிவந்த உடன், அப்பத்தான் நான் முதல் சுவாசத்தை முத்தமிடுகிறேன்..எனக்கும் அம்மாவுக்கும் உள்ள தொப்புள்கொடி உறவான, நஞ்சுக்கொடியை நீங்கள் வெட்டு கிறீர்கள். அம்மா....மா..மா! ஐயோ . உன்னிடமிருந்து 
வெ ட்டப்படுகிறேனே .என்னால் தனித்து வாழ முடியுமா என் அம்மாவே...அம்மாவின் துணையின்றி நான் தனித்து இருக்கிறேன்.  எனது நுரையீரல் மற்றும், இரதத ஓட்ட 
மண்டலத்தில், என்னைக் கேட்காமலேயே, பரிணாம விதிப்படி, ஏராள ஏராளமான மாற்றங்கள்..என்னுள். அம்மாடியோவ்..உங்களால் கற்பனை கூட செய்ய முடியாத படி,குறைந்த மணித்துளிகளில் அளப்பரிய மாற்றங்கள் ..என்னுள்..இதெல்லாம் யார் நிகழத்துவது? கட்டளையிடுவது யார்? வேறு யார்..என்னுள் உறைந்து கிடந்தது, உள்ளே இருந்து இயக்குனராய் பணிபுரியும் என் பரம்பரையின்  மரபணுக்கள்தான்."

  முதல் பரிமாற்றம்...!


    "எனது நுரையீரல் காற்று நுழைவதால் விரிவடைகிறது. அதன் சுவர்களல் நுனியில் இருக்கும் காற்று சிற்றறைகள் காற்றால் . நிரப்பப் படுகின்றன. இதனால் அங்குள்ள காற்றின் நிமித்தம் இரத்தம் நுரையீரலை நோக்கி ஓடிவருகிறது. அங்கே நுரையீரல் சுவர்களிலுள்ள  சிற்றறைகளில் காற்றின் பரிமாற்றம் நடைபெறுகிறது.  நுரையீரல் மேல் ஓடிவரும் தந்துகி குழாய்களில் காற்றின் பரிமாற்றம் அதாவது, (கரியுமில  வாயு,வெளிஏற்றப்பட்டு  அதிலிருந்து ஆக்சிஜன் உள்ளிழுக்கபப்ட்டுஇரத்தத்திற்குள் உள்வாங்கப்படுகிறது.) இதுதானப்பா நீங்கள் சொல்லும் சுவாசம். எனக்கு . அப்பாடி,என்  அம்மாவே என் முதல் சுவாசம்தான் இடுந்தாலும் ரொம்ப மூச்ச்சு முட்டுதே அம்மா..எனக்கு வாழ்நாளில் ரொம்ப ரொம்ப கஷ்டமான அம்சம் இதுதானா?.இப்படி  ஒரு முறை மூச்சு விடறதே.   பெரும்பாடா இருக்கே....ஆனா இது நடக்காட்டி நான் உயிரோடு இருக்க முடியாதே.எனவே  இது என் வாழ்வின் முதல் விஷயமும், அத்தியாவசியமான் உயிர் வாழ்தல் விஷயமுமாகும்.."

   முதல் நூறும்...தொடரும் முப்பதும்..

 " என்னோட மூச்சு சுவாசம் துவக்கத்தில், நிமிடத்திற்கு  15-100 என்றுதான் இருக்கும். பின்னரே ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு அது சரி செய்யப்பட்டு, நிமிடத்திற்கு 30-50 என ஒழுங்காக சீராக இருக்கும். இனி என் நுரையீரல் பணி  சீராக்கப்பட்டு இயங்
கும் அண்ணே. எனவே, இதயத்துக்கு கீழே இருக்கும் டக்டஸ் 
வெனோசஸ் ( Ductus Venosus ) என்ற ரத்தக் குழாய்  .அடைபட்டு விடும்.  கல்லீரல் தமனி தனியாகச் செயல்படத் துவங்கும். "


உயிரின் திறவு கோல் ..இதய அறைகள்...

  "இது மட்டுமா இருக்குன்கிரீங்க. இன்னும் இருக்குதுண்ணே  ரொம்ப கதை..அதுதான் நானும், நீங்களும் நீண்ட  நாள் உயிர் வாழ்வதற்கான  திறவுகோல் அண்ணே. அந்த மாற்றங்கள் எல்லாம் நம்ம இதயத்திலேதான் நடக்குது. நான் அம்மாவோட கருவறைக்குள் இருந்தபோது,  இதயத்தின் மேல் அறைகளின்  சுவரில் இருந்த சிறப்பான வால்வு , வேறு சில இரத்த குழாய்களும் பொறந்ததும் காணாம போயிடுது. ஏன்னா இனி அவர்களுக்கு வேலை இல்லியே. அதான்.  அதுவும் நான் பூமியிலயே வந்து விழுந்த ஓரிரண்டு மணித்துளிகளில் புதிய மாற்றங்கள் இதயத்தில் நடக்குது. நீங்க தொப்புள்கொடியில ஒரு கிளிப் போட்டதும், அம்மா கிட்டே இருந்து வந்த இரத்தம் நின்னு போகுது. எனவே நுரையீரலுக்கு வரும் இரத்தத்திற்கு என சிறப்பு இரத்த குழாய்கள தேவையாய் இருக்குதே ". 

  நிறம் மாறும் நான்..நீங்கள் 

   " நான் பொறந்ததும், தொப்புள் கோடி வெட்டியதும்/கட்டியதும்,அந்த நொடியிலேயே, இதயத்தின் மேலறையில் உள்ள, போராமன் ஓவல் *Foramen  ovule ) எனற துளை அடை படுகிறது. அடுத்த் நொடியிலே யே, மேலறையில் :சுத்த ரத்தமும், அசுத்த ரத்தமும் இயதத்தில் தனித்தனியாக வந்து போக வழிவகை செய்யப்படுகிறது. வலது வெ ன்டிரிக்கிலிலிருந்து ரத்தம் சுத்தம் செய்யப்படுவதற்காக/காற்று பரிவர்த்தனைக்காக நுரையீரலுக்குச் செல்லுகிறது. மீதி ரத்தம், இடது வென்டிரிக்கி லிலிருந்து பெருந்தம்னிக்கு செல்கிறது,எ ன் உடம்பு முழுசுக்கும் ரத்தம் தரச் சொல்ல. டக்டஸ் ஆர்டிரியோசஸ்(Ductus  Arteriosus )  என்ற குழாயின் இணைப்பு காணாம போயிடும். நுரையீரலின் தந்துகிகள் உடனே உருவாயிடும்; செயல்படவும் செய்யும்.. நான் என் உடல் வயலேட்  வண்ணத்திலிருந்து  ரோஸ் நிறத்துக்கு மாறி டுவேனே.." 

   உயிரின்  சிக்கலான முதல் மூன்று நிமிடங்கள்

   நான் இந்த பூமியப்பார்த்த 3-4 நிமிடங்களில் இத்தனை சிக்கலான விஷயங்களும் நடந்து முடிஞ்சுடும் அண்ணே. அப்பத்தான் நான் உயிரோடு இருக்க முடியும். இது எனக்கு  மட்டுமில்லே அண்ணே..உங்களுக்கும் இதே தான் நடந்துச்சு. எல்லாருக்கும் இதே கதைதான். 

சின்ன மாற்றங்களுடன்....நான் தயார் இப்ப..

   இன்னும் கூட கொஞ்சம் சின்ன சின்ன மாற்றங்கள் என்னுள்ளே நடக்கின்றன. நான் அம்மாவின் கருவறைக்குள் இருந்த போ து என்னுடைய உடல் வெப்பம், பெரியவர்களைப் போல இரு மடங்கு இருக்கும். ஏன்னா நான்தண்ணிக்குள்ள இருக்கிறனா..அதான் வெப்ப  சீரமைப்புக்காகவே இது.  இப்ப வெளியே.வந்துட்டனா..அவ்வளவு வெப்பம் வேண்டாம். அதான் கொஞ்சம் கொஞ்சமா சூட்டை இழக்கிறேன். என் உடல் குளிர்கிறது. இது தாங்கமுடியாமல் எனக்கு நடுங்குகிறது. இதன் மூலம் என் உடல் சூட்டை உண்டுபண்ணுகிறது. என் உடலில் , அம்மாவின் கருவறைக்குள் இருந்த பொது இருந்த எனது பழுப்பு கொழுப்பு இப்ப எனக்குத் தேவை இல்லே. அதனை எரித்துதான் உடல் சூடு செய்கிறேன். இனி உங்க கூட இந்த உலகுக்குன் தகுந்தாற்போல ஓட்டத்த்க்கு தயாராயிட்டேன் அண்ணே.. புறப்பட்டுவோமா..நான் ரெடி..நீங்க ரெடியா?
  .